11 நவம்பர், 2009

அகதிகளுக்கு நியூசிலாந்து உதவவேண்டும் என கோரிக்கை


78 இலங்கை அகதிகளுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள கப்பலை ஏற்க நியூசிலாந்து அரசாங்கம் மறுத்துள்ள நிலையில்,ஆபத்தான சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு நியூசிலாந்து அரசாங்கம் உதவவேண்டும் என அந்நாட்டின் அகதிகளுக்கான பேரவையின் தலைவர் நாகலிங்கம் இராசலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அகதிகள் தொடர்பாக அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு இராசலிங்கம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளுக்கான பாதுகாப்பை நியூசிலாந்து அரசாங்கத்துக்கு வழங்க முடியும் என்றும் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அகதிகள் தொடர்பாக முறையான கொள்கையை நியூசிலாந்து பேணி வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், அவுஸ்திரேலியா இதற்கு தீர்வினை முன்வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக