11 நவம்பர், 2009

கப்பலிலுள்ள இலங்கையர்களில் எண்மர் இந்தோனேசியாவில்
தரையிறங்க இணக்கம்-







இந்தோனேசியக் கடற்பிராந்தியத்தில் தரித்துள்ள கப்பல் தங்கியிருக்கும் 78 இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகளையும் பிலிப்பைன்ஸின் இடைத்தங்கல் முகாமுக்கு கொண்டு செல்வது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தக் குடியேறிகளை பிலிப்பைன்ஸக்கோ அல்லது நத்தல் தீவுக்கோ அழைத்துச்செல்வது அவுஸ்திரேலிய அரசாங்கம் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவருகிறது. சட்டவிரோத குடியேறிகளைக் கொண்ட ஓசியானிக் வைகிங் கப்பல் இந்தோனேசிய கடற்பிராந்தியத்தில் தரித்து நிற்பதற்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் நாளை மறுதினத்துடன் நிறைவடைகின்றது. ஏற்கனவே இந்த காலஅவகாசம் நவம்பர் 06ம் திகதியாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அவுஸ்திரேலியாவின் தீர்மானங்களுக்காக காலஅவகாசம் நீடிக்கப்பட்டது. இதனிடையே இவ்விடயம் தொடர்பில் சிங்கப்பூரிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் மார்டி நிழலோகாவோ ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் இந்தோனேசியவில் தரித்துநிற்கும் கப்பலில் உள்ளோரில் எட்டுப்பேர் இந்தோனேசியாவில் தரையிறங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர பாதுகாப்புச்சேவை பணிப்பாளர் சுஜத்மிகு இதனைத் கூறியுள்ளார். இக்கப்பலிலுள்ள ஏனைய இலங்கையர்களும், யாவா தீவின் மெரக் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள மற்றொரு கப்பலிலுள்ள 255இலங்கையர்களும் தொடர்ந்தும் அவுஸ்திரேலியா செல்வதற்கான எதிர்பார்ப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக