16 நவம்பர், 2009

20 வருடங்களின் பின் யாழ்-மன்னார் பஸ் சேவை ஆரம்பம்


யாழ்ப்பாணத்துக்கான ஏ9 விதியூடான போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பிகப்பட்டிருப்பதாக இலங்கை அரச போக்குவரத்து சேவையின் மன்னார் சாலைக்கான அதிகாரி தெரிவித்தார்.

மன்னாரில் இருந்து நாளாந்தம் காலை 6 மணிக்கு மன்னாரி அரச பஸ் தரிப்பிடத்தில் இருந்து பஸ்ஸொன்று இச்சேவையில் ஈடுபடும்.மன்னாரில் இருந்து புறப்படும் பஸ் வவுனியா சென்று சோதனை நடவடிக்கைகளின் பின் ஏ 9 வீதியூடாக நேரடியாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.

பயணிக்கும் ஒவ்வொருவரும் தேசிய அடையாள அட்டையின் 3 பிரதிகளை எடுத்துவருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 20 வருடங்களின் பின் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ஏ 9 வீதியூடான நேரடி போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக