16 நவம்பர், 2009

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது-

1996ம் ஆண்டு கொழும்பில் மத்திய வங்கி கட்டடத்தின் மீது நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு உதவியவர் என சங்தேகிக்கப்படும் ஒருவரை நேற்று இரகசிய பொலிசார் கைது செய்துள்ளனர். செட்டிகுளம் மணிக் முகாமிலிருந்து 60 வயதிற்கும் மேற்பட்டவராக போலி தகவல்களை சமர்ப்பித்து முகாமிலிருந்து வெளியேற முற்பட்டபோதே இவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். செல்லத்தம்பி நவரட்ணம் என்ற மேற்படி நபரே 200 கிலோ வெடிமருந்துகளை வவுனியாவிலிருந்து கொழும்பிற்கு எடுத்துவந்தவர் என அப்போதைய விசாரணைகளில் தெரியவந்திருந்ததாகவும் சம்பவத்தையடுத்து இவர் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னிப்பகுதிக்கு தப்பிச் சென்றிருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக