21 அக்டோபர், 2009

பேங்கொக்கில் இலங்கையர் மூவர் கைது
கடனட்டை மோசடி :
அகதிகள் விவகாரம் குறித்து ஆஸி. - இந்தோடு
னேஷியா இணக்கப்பா




அகதிகள் விவகாரங்களை இணைந்து கையாள்வதென, இந்தோனேஷிய மற்றும் அவுஸ்திரேலிய தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் மற்றும், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலியோ பாபம்பாங் யுதோயோனோ ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை இந்தோனேஷிய ஜனாதிபதி பேச்சாளர் டினோ பெட்டி ட்ஜலால் தெரிவித்துள்ளார்.

இதனை ஒரு விளம்பரமாக பிரசித்தப்படுத்தி முன்னெடுக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இந்தோனேஷியக் கடற்படையினர், குடிவரவுத் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கடந்த வார இறுதியில் இந்தோனேஷியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடற்பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட 78 அரசியல் தஞ்சம் கோரியவர்களையும் தற்காலிகமாகப் பொறுப்பேற்க இந்தோனேஷியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்தோனிஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 255 இலங்கையர்களையும், அரசில் அந்தஸ்த்து கோருபவர்களாக அங்கீகரிக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் உரிமை பேரவையிடம்


கடனட்டை மோசடி தொடர்பில் பேங்கொக்கில் மூன்று இலங்கையர்கள் கடந்த திங்கட்கிழமை தாய். பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவப்பிரியன் சிவபாக்கியராஜா, அழகப்பன் பாலேந்திரன் மற்றும் வெங்கடேஸ்வரன் மகேஸ்வரன் ஆகியோரே கைதானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேங்கொக்கின் சுக்ஹம்விட் சோய் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 104 இலத்திரனியல் அட்டைகளும், காந்தபுலன் உணரி(magnetic card-strip reader)ஒன்றும், இரண்டு (lap-top)மடி கணினிகளும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களிடம் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, அவர்கள் தாய்லாந்தைத் தளமாக பயன்படுத்தி, சர்வதேச கடனட்டை மோசடிகளில் ஈடுபட்டுவரும் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சர்வதேச வங்கி கணக்குகளை கொண்டிருக்கும் ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் கடனட்டை தகவல்களை பெற்று, அவற்றை போலி கடனட்டைகளுக்கு பிரதி செய்து இவர்கள், மோசடிகளில் ஈடுபட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக