27 ஆகஸ்ட், 2009

ஐ.நா.அமைப்பினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமானப் பணிகளுக்கு பிரித்தானியா உதவி வழங்கத் தீர்மானம்-

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமானப் பணிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் உதவிவழங்கத் தீர்மானித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார இணைப்புச் செயலகத்திற்கு பிரித்தானியா நிதியுதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க பிரித்தானியா 75ஆயிரம் ஸ்ரேர்லின் பவுண்களை வழங்கவுள்ளது. அத்துடன் மனிதாபிமானப் கடமைகளை மேற்கொள்வோர்க்குத் தேவையான தகவல்களை வழங்கும் பணிகளுக்கும் பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உதவி வழங்கும் நாடுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்குத் தேவையான புள்ளிவிபரங்களைப் பெற்றுக்கொள்ள பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக