27 ஆகஸ்ட், 2009

வடக்கில் உள்ளுராட்சி சபைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்-

வடக்கில் உள்ளுராட்சி சபைகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கு மாங்குளம் தெரிவுசெய்யப்பட்டு அதற்கென 900மில்லியன் ரூபா அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவுள்ளது. வடக்கில் ஓரளவு பாதிக்கப்பட்ட மற்றும் முழுஅளவிலும் பாதிக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளை புனர்நிர்மாணப் பணிகளுக்கென 625மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கே உருவாகவுள்ள வடமாகாண சபையின் தலைமைச்செயலகம் மாங்குளத்தில் அமையவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக