27 ஆகஸ்ட், 2009

முகாம்களிலிருந்து பல மதகுருமார்கள் குடும்பத்துடன் விடுவிப்பு




இலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்த இந்து கிறிஸ்தவ மத குருக்களும், அவர்களது குடும்பத்தினருமாக 116 குடும்பங்களைச் சேர்ந்த 428 பேர் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக முகாம்களில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதற்கான வைபவம் வவுனியா இராணுவ தலைமையகத்தில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் பணிப்பாளருமாகிய பசில் ராஜபக்ச அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. விடுவிக்கப்பட்டவர்கள் வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். கத்தோலிக்க மதகுருக்கள் ஐந்து பேர் மன்னார் ஆயரிடம் கையளிக்கப்பட்ட அதேவேளை, இந்து குருமார்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.



முகாம்களில் இருந்து விடுதலையாகிய பலரும் இந்த விடுதலை குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். ஆயினும் இன்று விடுதலையாகாமல் பலர் திரும்பவும் முகாம்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் இன்னும் ஓரிரு வாரங்களில் சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக