22 ஆகஸ்ட், 2009

மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலைய நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்-

மாற்றுக் கொள்கைக்கான மத்தியநிலைய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவுக்கு நேற்று கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு நேற்றுக்காலை அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதம் ஒன்றின்மூலம் இக்கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.ப்ளஸ் தொடர்பில் இலங்கையின் பிழையான நிலைப்பாடு மற்றும் தொழில் இழப்பு போன்றவை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு ஆணையாளர் பெனிடா பெரேரோ வோல்டனெருக்கு தகவல் வழங்கியமை தொடர்பாகவே இக்கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக