11 ஜூன், 2011

அரசியல் தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் - இந்திய தூதுக்குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை




இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியினூடாக கலந்துரையாடியபோதே இந்த ஆலோசனையை அவர் முன்வைத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த ஆலோசனை முன்வைக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் சகல தரப்பினரும் அதில் அங்கம் வகிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக