17 ஜூன், 2011

ஆட்டோ மீது மரம் முறிந்து விழுந்தது; பெண் ஸ்தலத்தில் பலி


பதியத்தலாவ பகுதியில் பயணித்த ஆட்டோவொன்றின் மீது வீதியோரத்தில் காய்ந்து பட்டுப் போன நிலையில் நின்றிருந்த பாரிய மரமொன்று திடீரென முறிந்து விழுந்ததில் ஆட்டோவில் பயணித்த பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியானார். மேலும் சிறுபிள்ளை யொன்றும், ஆட்டோ சாரதி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாக பதியத்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று நண்பகல் 2.30 மணியளவில் பதியத்தலாவ அக்ரியன்கும்புர - கெஹல்உல் பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியில் முன்பள்ளி விட்டு தனது பிள்ளையை கூட்டிச் சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவரே இந்த அனர்த்தத்திற்கும் முகம் கொடுத்துள்ளார்.

குறித்த பெண்ணின் சிறிய குழந்தை மற்றும் ஆட்டோ சாரதி ஆகியோரை பிரதேசவாசிகள் மரத்தை வெட்டி மீட்டு மஹியங்கனை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பதியத்தலாவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக