30 ஜனவரி, 2011

புலிகளின் ஆதரவாளர்களுக்கு பதில்கூற நேரமில்லை : அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளால் நிதி வழங்கப்பட்டு வருகின்ற அமைப்புகளின் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் வழங்கிக்கொண்டிருக்க இலங்கை அரசாங்கத்திற்கு நேரமில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்தியமை தொடர்பிலேயே ஜனாதிபதியின் புதிய ஊடகப் பணிப்பாளர் பந்துல ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை அரசாங்கம் அபிவிருத்தி குறித்து சிந்திப்பதாகவும் அவற்றுக்கிடையில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் குறித்து கண்டுகொள்ள தேவையில்லை என பந்துல ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக