5 ஜனவரி, 2011

2010 இல் சுங்கத் திணைக்களம் 1.5 பில்லியன் ரூபா வருமானம்

2010 ஆம் ஆண்டு இலங்கை சுங்கத் திணைக்களம் 1.5 பில்லியன் ரூபாய்களைத் தேறிய வருமானமாக ஈட்டியிருப்பதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விமான நிலைய பயணிகள் வருகை மற்றும் வெளியேறுகைப் பகுதிகளில் கடந்த வருடம் சுங்கத் திணைக்களத்தால் 100ற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இவற்றில் 62 தேடுதல்கள் பாரியவை. இவற்றின் மூலம் 1.5 பில்லியன் ரூபாய்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளன. தண்டப் பணமாக அறவிடப்பட்ட தொகையும் இதில் உள்ளடங்குவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட சோதனைகளில் வெளிநாட்டு நாணயங்களைக் கடத்த எடுக்கப்பட்ட 20 முயற்சிகள் சுங்கத் திணைக்களத்தால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் திணைக்களத்துக்கு 312 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது. சட்டவிரோதமாக தங்கக் கட்டிகளைக் கடத்த எடுக்கப்பட்ட 15 முயற்சிகள் முறியடிக்கப்பட்டதில் 109 மில்லியன் ரூபாவும், போதைப் பொருள் கடத்தல்களை முறியடித்ததன் மூலம் 1.05 பில்லியனும் பெறப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக அபாயகரமான போதைப் பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்ததன் ஊடாக 2 மில்லியன் ரூபாவும், சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசி களைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மூலம் 23 மில்லியன் ரூபாவும் சுங்கத் திணைக்களத்துக்கு கிடைத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக