2 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தம் : உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம் ஒப்படைப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதவான் ஷிராணி பண்டாரநாயக்க தலைமையிலான ஐவர் அடங்கிய நீதவான் குழு இந்த மனுவை பரிசீலனை செய்தது.

அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி உயர்நீதிமன்றின் பரிந்துரைகளைக் கோரியிருந்தார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இந்த யோசனைத் திட்டம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகர் சமால் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்படுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக