4 ஜூன், 2010

வன்னி முகாம்களில் மக்கள் திண்டாடும் போது கொழும்பில் கொண்டாட்டம்? ஜனநாயக தேசிய முன்னணி கேள்வி



வன்னி முகாம்களில் மக்கள் திண்டாடும் போது கொழும்பில் கொண்டாட்டம் தேவையா என ஜனநாயக தேசிய முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில் இன்று ஆரம்பமானதை தொடர்ந்து கொழும்பில் பல இடங்களிலும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. இதே வேளை இவ் விழாவில் கலந்து கொள்ள பல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முகாம்களில் இருப்பதோடு பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். ஆனால் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. வடக்கில் மக்கள் திண்டாடும் போது பொழும்பில் கொண்டாட்டம் தேவையா என ஜனநாயக தேசிய முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக