8 மே, 2010

ததேகூவுக்கு ஆதரவு; அரச அதிகாரிகள் இடமாற்றம் : செல்வம் அடைக்கலநாதன் முறைப்பாடு

பொதுத் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் எனக் கருதப்படும் அரச அலுவலர்களைப் பழிவாங்கும் நோக்குடன் அரச தரப்பினர் அவர்களை இடமாற்றம் செய்து வருகின்றனர்.

இது குறித்து எழுந்த பிரச்சினை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

தேர்தலின்போது அரச பதவி வகித்த சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சார்பாக செயற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

தேர்தல் முடிவுற்ற நிலையில் குறித்த அதிகாரிகள், பழிவாங்கப்படும் நோக்குடன் இடமாற்றம் மற்றும் . இடைநிறுத்தம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற விடயங்கள் இடம்பெறின் உடனடியாகத் தனக்கு அறியத்தருமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக