30 ஜனவரி, 2010

அ. இ. இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு வாழ்த்து:
அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக உறுதி

தேர்தலில் அமோக வெற்றிபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பிவைத் துள்ளது. மேற்படி மன்றத்தின் சார்பில் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் தலைவர் வி. கயிலாசப்பிள்ளை ஆகியோர் கையெடுத்திட்டு அனுப்பி வைத்துள்ள இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

தேர்தலில் தாங்கள் அடைந்திருக்கும் வெற்றியையொட்டி இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த நாட்டிலுள்ள சகல மக்களும் இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் கெளரவத்துடனும், சமத்துவத்துடனும் கூடிய சமாதான வாழ்வை, தங்கள் தாய்நாட்டில் மேற்கொள்ளுவதற்கு வசதியாக வளமான நாடாக இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானின் திருவருள் தங்களுக்குக் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.

எங்கள் மக்கள் பல வழிகளில் கஷட்டப்பட்ட வேளையில், அவர்களுக்கு மனிதாபிமான சேவைகளைச் செய்வதற்கு தாங்களும், தங்கள் அரசாங்கமும் எமக்குத் தந்த சந்தர்ப்பத்திற்கும் உதவிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், திருக்கேதீஸ்வர ஆலய சூழலை மேம்படுத்துவதற்காகவும், கட்டமைப்பு வசதிகளை அங்கு அமைத்துத் தருவதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தமையையும், சமூகசேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் திட்டத்திற்கமைய அங்கு முதியோர்களுக்கான இல்லமொன்று அமைத்துத் தருவதையும், புனர்வாழ்வு முகாமிலிருந்து மாணவ சிறார்கள் விடுதலை செய்யப்பட்டு வருவதையும் குறிப்பாகச் சொல்லலாம்.

எங்கள் மாமன்றத்தின் துணைத் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவருமான செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் கல்வி அமைச்சருக்கு விடுத்திருந்த வேண்டுகோளாக இந்து மாமன்ற கல்விக் குழு உறுப்பினரான யாழ். பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எஸ். மோகனதாஸ் பசில் ராஜபக்ஷ அவர்களிடம் வலியுறுத்திய விடயமாக யாழ். பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடமொன்றை அமைப்பது தொடர்பாக தங்களது மஹிந்தவின் சிந்தனை தொலைநோக்கு தேர்தல் விஞ்ஞானபனத்தில் குறிப்பிட்டிருப்பதை மெச்சுகின்ற அதேவேளையில் அதனை உடனடியாக நிறுவுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

வடக்கு, கிழக்கு இளைஞர்களை கல்வித் துறையில் முன்னேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதன் அவசியத்தையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். யாழ். பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், பட்டதாரி மாணவர்களுக்குரிய விடுதி வசதிகளும் உடனடியாகத் தேவைப்படுகிறது. இது தொடர்பாகவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதுடன், வடக்கு கிழக்கு இளைஞர்களின் வளமான எதிர்காலத்திற்கும் ஆவன செய்வீர்கள் என நாங்கள் நம்புகின்றோம்.

அரசியல் சார்பற்ற சமய நிறுவனமான எங்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பாக, தாங்கள் இந்நாட்டு மக்களுக்கு வழங்கும் சகல மனிதநேய சமூகநலத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்கிவருவோம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



பொதுத் தேர்தலில் ஐ. ம. சு. மு 149 ஆசனங்களை கைப்பற்றும்

2/3 பெரும்பான்மையைப் பெறும் -விமல் வீரவன்ச

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 149 ஆசனங்களை வென்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் என ஜே. என். பி. தலைவர் விமல் வீரவன்ச எம். பி. தெரிவித்தார்.

ஒப்பீட்டளவில் 1988 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ சுமார் 50.43 வீத வாக்குகளைப் பெற்றும் 120 ஆசனங்களை வென்றார். அதி கூடிய பெரும்பான்மையைப் பெற்ற 58 வீத வாக்குகளைப் பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 149 ஆசனங்களை பெறுவது உறுதி என்றும் ஜே. என். பி. தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இதேவேளை, தேசத்துரோக செயலில் ஈடுபட்டவரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை படுகொலை செய்யவும் திட்டம் தீட்டியவருமான சரத் பொன்சேகாவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல அவருக்கு இடமளிக்கக் கூடாது என்றும் ஜே. என். பி. ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜே. என். பி. தலைமையகத்தில் விமல் வீரவன்ச நேற்று செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:-

சம்பந்தனுடனான இரகசிய ஒப்பந்தம் மூலம் தமிழ்ப் பிரிவினைவாத சக்திகளுக்கு பொன்சேகா வலுச் சேர்த்ததாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டினார்.

வடக்கு, கிழக்கு தேர்தல் வாக்களிப்பை விபரித்துள்ள அவர், பாதுகாப்புப் படையினரின் அளப்பரிய தியாகத்தின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு எதிராக பொன்சேகா செயற்படுவதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை பலிக்கடாவாக்கியதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஒரு மகிழ்ச்சியான மனிதராகக் காணப்படுகிறார். தற்போதைய நிலையில் ரணில், பொன்சேகாவுடனும் ஜே. வி. பியுடனும் சேர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை. பொன்சேகாவின் அணியிலுள்ள மங்கள சமரவீர, சோமவன்ச அமரசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தோல்வியை ஏற்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள விமல் வீரவன்ச, இந்தத் தலைவர்களை அரசியல் அநாதை களாக்கிவிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, அவர்களால் ஏற்பாடு செய்த செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றாமல் இருந் துள்ளாரெனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.


62 வது சுதந்திர தின வைபவம் கண்டியில்



பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 62 ஆவது சுதந்திர தின வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை பிரதேசத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க தெரிவித்தார்.

பொலிஸாரினதும் முப்படையினர்களதும் கண் காட்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் விசேடமாக இடம் பெறவுள்ளன.

இதேவேளை புதேசத்தின் மகுடம்பூ கண்காட்சியும் கண்டி பள்ளேகலையில் அன்றைய தினம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.



பாராளுமன்ற தேர்தல்:
2/3 பெரும்பான்மையை பெற்று அரசியல் அமைப்பை மாற்றுவதில் அரசு உறுதி



பாராளுமன்றத் தேர்தல் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை யைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதென்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பினை அரசாங்கம் கோரியுள்ளது. அவர் களின் ஒத்துழைப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ளது. அதற்கென ஓரிருவாரங்கள் அவகாசம் வழங்கு வோமெனவும் குறிப்பிட்ட அமை ச்சர் எதிர்க்கட்சியினரின் ஆதரவு கிடைக்காது போனாலும் பொதுத் தேர்தல் மூலம் மக்கள் ஆதரவினைப் பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

ஜனாதிபதித் தேர்தலில் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளதையடுத்து அரசியல மைப்பில் திருத்தமொன்றை ஏற் படுத்தி சகல மக்களுக்கும் ஏற்றதான நல்லாட்சி யொன்றை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தைக் கலைப்பதுடனும் மார்ச்சில் தேர்தலை அறிவிக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. பொதுத் தேர்தலில் மக்களின் பூரண ஆதரவு கிடைப்பது உறுதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக