16 ஜனவரி, 2010

புதிய ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகும் சக்தியாக மலையக வாக்குகள்!


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கா.இ மலையக மக்கள் முன்னணிஇ பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற மலையகத்தின் மக்கள் செல்வாக்குள்ள தொழிற்சங்க அரசியல் அமைப்புக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு ஏற்கனவே முன்வந்துள்ளன.

இந்த நிலையில் இ.தொ.காவிலிருந்து சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அந்த அமைப்பிலிருந்து விலகி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்வந்துள்ளனர்.

அதேவேளைஇ மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரனின் மறைவைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மலையகத்தில் இதுவரை சூடுபிடிக்கவில்லை என்றே தெரிகிறது.

இவ்வாறானதொரு நிலையில்இ மலையகத் தமிழ் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்பார்த்த அளவில்கிடைக்குமா என்ற ஐயப்பாடே நிலவுகின்றது.

எதிரணியின் பொது வேட்பாளரான ஜெனரல் பொன்சேகாவுக்கு ஜனநாயக மக்கள் முன்னணிஇ தொழிலாளர் தேசிய முன்னணிஇ இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணி போன்ற அமைப்புக்கள் ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளன. எனினும் மலையகத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்னும் சூடுபிடிக்கவில்லை.

வடக்கு கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் மலையகத்தமிழ் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் பெரும்பான்மை மக்களின் வாக்குப்பலம் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் சமபலமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் எதிர்வரும் ஜனாதிபதியைத் தீர்மானிக்கப் போகின்ற சக்தியாக மலையகத் தமிழ்மக்களின் வாக்குகளும் உள்ளடக்கப்பட உள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக