7 ஜனவரி, 2010

பிரபாகரனின் தந்தை காலமானார்

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை இன்று மரணடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த ஒய்வு பெற்றிருந்த அரச உத்தியோகத்தரான வேலுப்பிள்ளை, இன்றையதினம் இயற்கையெய்தியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த மே மாதம் வன்னியில் இடம்பெற்ற உக்கிரம மோதல்களின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த பிரபாகரன் பெற்றோரை இராணுவத்தினர் விசாரணைக்காக கொழும்பு கொண்டுவந்திருந்த நிலையிலேயே இன்றையதினம் வேலுப்பிள்ளை அவர்கள் இயற்கையெய்தியதாக இராணுவம் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக