9 ஜனவரி, 2010

பிரபாகரனின் தந்தையாரின் இறுதிக்கிரியை நாளை வல்வை ஊறணி மயானத்தில்

விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை. அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளன. அவரது பூதவுடல் அன்று முற்பகல் 11 மணியளவில் ஊறணி மயானத்தில் தகனஞ் செய்யப்படும். அமரர் வேலுப்பிள்ளையின் பூதவுடல் வல்வை, பூச்சிவிட்டா னில் உள்ள அவரது உறவினர்களில் ஒரு வரின் வீட்டில் வைக்கப்பட்டு கிரியைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பூச்சிவிட்டான் பகுதி தீருவில் பன்னிருவர் மயானத்திற்குச் சமீபாக உள்ளது.

அமரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை நண்பகல் தொடக்கம் தீருவில் சதுக்கத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பனாகொட இராணுவ தடுப்பு முகாமில் காலமான வேலுப்பிள்ளையின் சடலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜி லிங்கம் பொறுப்பேற்று இங்கு கொண்டுவர ஏற்பாடாகியுள்ளதாகவும் அறியவந்தது. அதே பனாங்கொட முகாமில் தடுத்து வைக் கப்பட்டிருந்த பார்வதிப்பிள்ளை வேலுப்பிள்ளை யும் யாழ்ப்பாணத்துக்கு கூட்டி வரப்படுவார் என்றும் பிந்திய தகவல்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக