11 டிசம்பர், 2009

இன்று கட்டுப்பணம் செலுத்தினார் ஜெனரல் பொன்சேகா









சார்பில்
பிரதான ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதியே ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் இறுதி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது
12,000 அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? : விக்கிரமபாகு கேள்வி


"நாட்டில் தற்போது 12 ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது? எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது எதுவும் எமக்குத் தெரியாது.

நாட்டை சிறைக்கூடமாக்கிவிட்டு ஒரு தேர்தல் அவசியம் தானா?" என இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கேள்வி எழுப்பினார்.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்கிரமபாகு மேலும் குறிப்பிடுகையில்,

"பெருந்தொகையான அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். உடனடியாக அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுடைய அடையாளங்களைக் காப்பதற்காக, தங்களுடைய உரிமைகளைப் பேணுவதற்காக குரல்கொடுத்தோரை எவ்வாறு கைது செய்ய முடியும்?

தமது மக்களுக்கு உணவில்லை, துயரத்துடன் இருக்கிறார்கள் என எழுதிய திஸ்ஸநாயகம் சிறை வைக்கப்பட்டார். என்னை விட குறைவான வார்த்தைகளே அவர் பேசினார். அவருக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக விடுவிக்குமாறு நாம் அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.
எங்கள் பிள்ளைகளைக் காட்டுங்கள் : மனித உரிமைத் தினத்தில் தாய்மார் வேண்டுகோள்


"எமது பிள்ளைகளின் படங்களை ஏந்திய வண்ணம் ஊர் ஊராகத் தேடுகிறோம். இறுதிக் கிரியைகள் செய்வதா, இறுதிவரை தேடுவதா என்று தெரியவில்லை. மனசாட்சியுள்ள உங்களை மன்றாடிக் கேட்கின்றோம். தயவு செய்து எங்கள் பிள்ளைகளைக் காட்டுங்கள்..." என காணாமல் போனோரின் தாய்மார் நேற்றுக் கதறியழுது வேண்டுகோள் விடுத்தனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று, காணாமல் போனோரைத் தேடியறியும் குழுவினரால் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு ஹைட் பார்க் மைதானத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பமானது.

தமது பிள்ளைகள், கணவன், பெற்றோர் என காணாமல்போன அனைவரினதும் உறவினர்கள் உட்பட பலர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் விசேட கண்காட்சியுடன், கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காணாமல் போனோரின் உறவினர்கள் கதறியழுத வண்ணம் தமது உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தனர்.

"மனித உரிமைகள் தினம் இன்று உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகளை வலியுறுத்தும் தினத்தில் நாம் எமது சொந்தங்களை இழந்து தவிக்கிறோம்.

எதற்காகக் கைது செய்தார்கள், எங்கே போனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றி எந்தவொரு செய்தியும் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும் பரவாயில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதை மட்டுமாவது உறுதிப்படுத்துங்கள்" என கலந்து கொண்டோர் மனமுருக கோரிக்கை விடுத்தனர்.
இஸ்ரேலிடமிருந்து 6 கப்பல்கள் அடுத்த வருடம் கொள்வனவு



சூழல் நிறைவடைந்த நிலையில், வேகமாகத் தாக்குதல் நடத்தக் கூடிய 6 கப்பல்களை அடுத்த வருடம் இஸ்ரேலிடமிருந்து கடற்படை கொள்வனவு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துமுகமாக இவற்றைக் கொள்வனவு செய்யவிருப்பதாகக் கடற்படை கொமாண்டர் வைஸ் அட்மிரல் திசேர சமரசிங்க இன்று காலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் ஊடுறுவதைத் தடுப்பதற்கேற்ற வகையில், பலத்த காவல் நடவடிக்கையில் இவை ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை இலங்கை மீனவர்கள் குழு ஒன்று இந்திய கரையோர காவல்துறையைச் சேர்ந்த இருவரைப் பணயம் வைத்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்திய கடற்பரப்புக்குள் பிரவேசித்த இந்த மீனவர்களை கரையோர காவல்துறையினர் கைதுசெய்ய முற்பட்டவேளை, அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றிய இலங்கை மீனவர்கள் அவர்களைப் பணயம் வைத்ததாக கடற்தொழில் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 7 படகுகள் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அதில் உள்ளவர்களைக் கைதுசெய்ய முற்பட்ட இரண்டு கரையோர காவல்துறையினரை குறித்த படகுகள் சுற்றிவளைத்ததுடன் அவர்கள் இருவரையும் பணயம் வைத்ததாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த மீனவர்கள் பின்னர் இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக