6 நவம்பர், 2009

மீள்குடியேற்றம் நிறைவுறும் வரையில் அரசியல் தீர்வினை மேற்கொள்வது கடினமாக இருக்குமென மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு-

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவுறும் வரையில் தீர்க்கமான அரசியல் தீர்வினை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு கடினமாக இருக்குமென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றங்கள் நிறைவடையும் வரையில் அதற்கு எவ்வளவு காலங்கள் எடுக்குமென்ற கேள்வியே எழுந்து வருகிறது. அரசாங்கத்தினால் அரசியல்தீர்வு குறித்து யோசிக்க முடியாத நெருக்கடிநிலை காணப்படுகிறது. இதற்கிடையில் அரசாங்கம் இவ்வாண்டு நிறைவதற்கு முன்னர் 80முதல் 90சதவீதமான இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற முடியுமானதாக இருக்கும். உள்ளக இடம்பெயர்வுக்கு உள்ளானவர்கள் மாத்திரமன்றி இந்தியாவில் அகதிகளாக உள்ளவர்கள்கூட வீடு திரும்ப ஆரம்பித்துள்ளனர். மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு நிலக்கண்ணிவெடிகள் பாரிய சவாலாக உள்ளன. மக்கள் அவசரமாக அங்கு மீள்குடியமர்த்தப்பட்டு விட்டால் நிலக்கண்ணிவெடிகள் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அது ஒரு புதிய பிரச்சினையை தோற்றுவிக்கும். அத்துடன் உட்கட்டுமான வசதியின்றி மக்களை மீள்குடியேற்றம் செய்யவும் முடியாதநிலை உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக