8 செப்டம்பர், 2009

கதிர்காமர் கொலை வழக்கு : பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்களை நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை வழக்கில் அதனுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகநாதன் சிவசங்கர் ஆகிய இருவரும் இறந்துள்ளமை உறுதி செய்யப்பட்டமையினால் அவர்களின் பெயரை வழக்கிலிருந்து நீக்குமாறு இன்று உயர் நீதி மன்ற நீதவான் குமுதினி விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக