15 ஜனவரி, 2010

தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் நிபந்தனை அடிப்படையில் விடுதலை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் நிபந்தனை அடிப்படையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இரகசிய பொலீசாரினால் வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மேமாதம் வவுனியாவில் வைத்து இரகசியப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்ட அவர், தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் இரகசியப் பொலீசாரினால் இதுவரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரகசியப் பொலீசார் முன்னிலையில் அவர் ஆஜராக வேண்டுமென்றும், வதிவிட முகவரி மாறுபட்டால் உடனடியாக நீதிமன்றுக்கோ இரகசியப் பொலீசாருக்கோ அறிவிக்க வேண்டுமென்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக