ஜனாதிபதி ம
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பி உள்ளது தொடர்பாகவே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து முப்பது மில்லியன் டொலர்களை நஷ்ட ஈடாகக் கோரி வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மூன்று வழக்குகள் தொடர்பாக வாஷிங்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
அலரி மாளிகைக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டபோது அங்கு அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பின்னர் நீதியமைச்சு இந்த அழைப்பாணையை ஏற்றுக் கொண்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் மாதம் ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்ல வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக