6 ஏப்ரல், 2011

இலங்கைக்கு சொந்தமான கச்சதீவு இந்தியாவின் வசமாகும் அபாயம்: ஜயலத் எச்சரிக்கை

கடலில் வேலி போட்டு இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியாது. கடலில் வேலி போட்டு இலங்கை இந்திய மீனவர் பிரச்சினையை தீர்த்து வைக்கஉள்நாட்டு மீனவர் பிரச்சினையில் அரசு அரசியல் இலாபம் தேடியமையால் இலங்கைக்கு சொந்தமான கச்சதீவு இந்தியா வசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.

மாற்று அரசாக ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டு மீனவர் பிரச்சினையையும் இலங்கையின் கடல் வளத்தையும் பாதுகாக்கும். இதற்கான பேச்சுவார்த்தைகள் இந்தியாவுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை மீனவர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

முப்பதாண்டுகளுக்கு பிறகு வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீண்டும் சோர்வடையும் நிலை உருவாகியுள்ளது.இந்தியா மற்றும் இலங்கை மீனவர் பிரச்சினை தற்போது உக்கிரம் அடைந்து பாரிய முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளது.

இந்திய அரசியலில் மீனவர் பிரச்சினையும் கச்சதீவு விவகாரமும் பாரியளவில் சூடுபிடித்துள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கம் ஒன்றுமே நடக்காததைப் போல் மௌனமாக உள்ளது. மிகவும் எளிதாக இராஜதந்திர ரீதியில் தீர்த்து வைக்கக் கூடிய இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினையில் அரசாங்கத்தின் பராமுகத்தால் பாரிய பின் விளைவுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

கடந்த காலங்களில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே உறவு முறையிலான அந்நியோன்னிய நட்பு காணப்பட்டது. கரையோர கலாசாரத்தில் இரு நாட்டு மீனவர்களும் இணைக்கப்பட்டிருந்தமையால் பேதங்கள் இன்றி சுமுகமாக உறவு பாதுகாக்கப்பட்டது.

ஆனால் தற்போது குறிப்பிட்ட சில சம்பவங்களின்போது அரசு தலையிடாததால் பாரிய முறுகல் நிலையே உருவாகியது. எனவே ஐ.தே.க. கடந்த வாரத்தில் இந்திய மீனவ அமைப்புக்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இரு நாட்டு மீனவர்களிடையே நட்புறவை ஏற்படுத்த பங்களிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக