6 ஏப்ரல், 2011

சாயி பாபாவின் உடல் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம் 2 ஆவது சீரடி அறிவிப்பு

ஸ்ரீ சத்தியசாயி பாபா பிரசாந்தி நிலையத்தில் உள்ள சிறப்பு மருத்து வமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 85 வயதாகிறது.

மூச்சுத்திணறல் காரணமாக மார்ச் 28 ம் திகதி அவர் அங்கு சேர்க்கப்பட்டார். அது முதல் அவருடைய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக சிகிச்சையை ஏற்காமல் செயலிழந்து வருகின்றன.

இப்போது செயற்கை முறையில் சுவாசிக்கிறார். சிறுநீரகங்களைச் செயற்கை முறை யில் இயக்கி வருகின்றனர். நேற்று முன் தினம் மாலை வைத்தியர்கள் அளித்த சிறப்பு அறிக்கையில், பாபாவின் உடல் நிலை கவலைக் கிடமாக சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை காலை வெளியி டப்பட்ட சிறப்பு மருத்துவ அறிக் கையில் அவர் தேறிவருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தன்னுடைய ஆன்மிக உரைகளால் இலட்சக்கணக் கானோரை நல்வழிப்படுத்திய பாபா தன்னுடைய பக்தர்களைக் கொண்டு ஈடு இணையற்ற சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.

கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி போன்றவற்றை மாபெரும் அளவில் அளித்து மக்களுக்கு அருளை வாரிவழங்கி வருகிறார். பாபா உடல் நலம் பெற வேண்டும். மீண்டும் வந்து தங்களுக்கு நல்லாசி வழங்கி நல்ல வழிகாட்ட வேண்டும், ஏழை எளியவர்களுக்கான சமூகப் பணிகளைத் தொடர வேண்டும் என்று அவருடைய பக்தர்கள் வீடுகள் தோறும் மனம் உருகப் பிரார்த்தனை செய்கின்றனர்.

இதனிடையே சாய்பாபாவை தரிசிக்க தங்களை அனுமதிக்காத மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர அதிகாரிகளை பாபா ஆதரவாளர்கள் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புட்டபர்த்தி நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

அங்குள்ள நிலைமையை கருத்தில் கொண்டு கூடுதல் பொலிஸ் படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புட்டர்பத்தியில் சாய்பாபாவின் வாரிசு யார் என்பதில் மோதல் ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவியது.

அது வெறும் வதந்தி என்பது பிறகு தெரிய வந்தது. ஒரு தனியார் டி.வி சானல் திட்டமிட்டு இந்தப் பொய்த் தகவலை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சாய்பாபாவுக்கு யாரும் வாரிசு கிடையாது என்று அதிகார ப்பூர்வமாக அறிவிக்கப்ப ட்டுள்ளது.

பிரசாந்தி நிலைய பொறுப்பாள ர்கள் இது பற்றி கூறுகையில், புட்டபர்த்தி சர்வதேச ஆன்மிக தலமாகத் தொடர்ந்து நீடிக்கும். இந்தியாவின் 2 ஆவது சீரடி என்று இது அழைக்கப்படும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக