15 மார்ச், 2011

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வுப்பணிகள் ஜூலையில் ஆரம்பம்

மன்னார் கடற்பரப்பில் எதிர்வரும் ஜூலை மாதம் எண்ணெய் அகழ்வுப்பணி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கரின் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையின் வடமேற்குக் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வுகளை நடத்துவதற்காகவும் அந்தப் பிராந்தியத்தில் மூன்று எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதற்காகவுமென கரின் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு 10 கோடி டொலர்களை முதலிட்டிருந்தது.

இப் பணிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரித்தானியாவின் கரின் 'எனேர்ஜி" நிறுவனத்தின் இந்தியக் கிளையான கரின் இந்தியா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக