28 ஜனவரி, 2011

குரங்கிற்கும் கைத்தொலைபேசி ஆசை






குரங்கு கையடக்கத் தொலைபேசி மீதான ஆசையினால் ஆசிரியர் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியை பறிகொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் நோட்டனில் இடம்பெற்றுள்ளது. நோட்டன் கணபதி வித்தியாலய ஆசிரியவர் ஒருவரே தனது கைத்தொலைபேசியை குரங்கிடம் பறிகொடுத்துள்ளார்.

நோட்டன் பிரிட்ஜ் வனப் பகுதிகளில் வாழும் குரங்குகளின் அதிகரிப்பினால் கணபதி பாடசாலை பகுதிகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதும் இக்குரங்குகள் பாடசாலை மாணவர்களின் மதிய போசனம், பாட புத்தகங்கள் என்பனவற்றை வகுப்பறைக்குள் புகுந்து நாசம் செய்வதாக தெரிய வருகிறது. அத்தோடு, அண்மையில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியையும் குரங்கு எடுத்து சென்றுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏதும் விபரீதம் ஏற்படுமோ என பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக