28 ஜனவரி, 2011

வீடுடைப்பு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு யாழ். கோப்பாய் பகுதியில் 9 சந்தேக நபர்கள் கைது





யாழ். நகரில் வீடுடைப்பு, வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கோப்பாய் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பொன்றின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்ட போதே ஏனைய எட்டுப் பேரும் யாழ்.

குருநகர் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட தாக யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

யாழ். கோப்பாய் பகுதியில் வீடுடைப்பு சம்பவம் தொடர்பாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராணுவத் தினர் இரவு சந்தேக நபரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பொலிஸாரின் தீவிர விசாரணையின் பின்னர் இவர்களிடமிருந்து 100 பவுண் நகைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ். நகரில் ஆங்காங்கே நடைபெற்ற வீடுடைப்பு, வழிப்பறி, சங்கிலி அறுப்பு போன்ற சம்பவங்களுடன் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சுமார் 500 க்கும் மேற்ப ட்ட பவுண் தங்கநகைகளை மீட்க முடியும் எனவும் பொலிஸார் தெரி விக்கின்றனர்.

இந்த ஒன்பது பேருடன் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக யாழ். நகரில் கொள்ளை, வழிப்பறி, வீடுடைத்தல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வரு க்கின்றனர்.

பொலிஸாரும் தீவிர கண்கா ணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். திடீர் வீதிச் சோதனைகள் ரோந்து நடவ டிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டுள் ளனர்.

யாழ்.குடா நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் தலைமையில் நடைபெற்ற மாநாடொன்றின்போது கலந்துகொண்ட யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகையும், இராணுவத்தினரின் திடீர் வீதிச் சோதனைகள், ரோந்து நடவடிக்கைகள் குறித்து பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அதிகாரமளிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த வேறு எவரேனும் ஆயுதங்கள் வைத் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக