12 அக்டோபர், 2010

அமெரிக்க வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடு நிலைமையை ஆராய விஷேட குழு இன்று விஜயம்


முப்பது பேர் அடங்கிய அமெ ரிக்க வர்த்தகத் தூதுக்குழு நேற்று இலங்கை வந்தடைந்தது.

அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட இந்த தூதுக்குழு இன்று (12) வட மாகாணத்திற்கு, விஜயம் செய்யவு ள்ளது. யாழ்ப்பாணத்தை இன்று காலை சென்றடையும் மத்திய மற் றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் (மடூடுசிடீசிக்ஷ நசிஹசிடீ பஙுஹக்ஷடீ தடீஙீஙுடீஙூடீடூசிஹசிடுசுடீ- மநபத) பிரதிநிதி மைக்கல் மெலன் தலை மையிலான உயர்மட்ட அமெரிக்க வர்த்தக தூதுக்குழுவினருக்கும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறிக்கும் இடையி லான விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பொது நூலகத்தில் வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற வுள்ள இந்த சந்திப்பின் போது வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய் ப்புக்கள் குறித்தும், வட பகுதியில் முதலீடு செய்வது குறித்தும் விரி வாக ஆராயப்படவுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தலைமையில் அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் வர்த்தக பொறு ப்பாளர் நிமல் கருணாதிலக்க, இல ங்கை வர்த்தக திணைக் களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி. ரி. சேனாதீர, இலங்கை வெளி விவகார அமை ச்சு, இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகளும் இன்று யாழ்ப்பாணத்திற்குச் செல்லவுள்ளனர்.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, மண்டத்தீவு, கேரதீவு, தீவு பகுதிகளு க்கும், வட பகுதியிலுள்ள கைத் தொழில் மற்றும் சுற்றுலா பிரதேசங் களுக்கும் இந்த வர்த்தகத் தூதுக்குழு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வர்த்தக துறையினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர். அமெரிக் காவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை வந்துள்ள இந்த வர்த்தகத் தூதுக் குழுவின் சுமார் ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.

இருநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அமெ ரிக்க- இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு திட்ட ஒப்பந்தத்திற்கு அமைய (மந- நஙுடுங்ஹடூகூஹ பஙுஹக்ஷடீ & ஐடூசுடீஙூசிஙிடீடூசி ஊஙுஹஙிடீசூச்ஙுகூ அகிஙுடீடீ ஙிடீடூசி பஐஊஅ) தனியார் வர்த்தக துறை யினரின் ஒத்துழைப்பை, பெற்றுக் கொள்ளும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதுரகத்தின் வர்த்தக பொறுப்பாளர் நிமல் கருணாதிலக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை நாளை 13ம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ள தனியார் மற்றும் அரச பங்குடமை மாநாட்டில் இந்தத் தூதுக்குழுவினர் கலந்து கொள்ள வுள்ளனர். அத்துடன் 14ஆம் திகதி இருநாட்டு அரசாங்க பிரதி நிதிகளுக்கும் இடையில் அமெரிக்க- இலங்கை வர்த்தக மற்றும் முதலீ ட்டு திட்ட ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள் ளது.

வடக்கில் முதலீட்டுத்துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசா ங்கம் பல்வேறு திட்டங்களையும், செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, தற்பொழுது அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக