10 ஆகஸ்ட், 2010

காணாமல்போன விடுதலைப்புலிகளின் குடும்பத்தினர் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள்



இறுதி யுத்தத்துக்குப் பின்னர் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் குடும்பத்தினர் சார்பில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோர் காணாமல் போய்விட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாயின.

எனினும் அவர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக தகவல்கள் வெளியாயின.

இதுபோன்று முரண்பாடாக செய்திகள் வெளியாவதால், ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடும்பத்தினர் தற்போது ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.

யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இந்த மனுக்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக