5 ஏப்ரல், 2010

பொன்சேகா மூலம் வாக்குப்பெற்று ஹதுன்நெத்தியை சபைக்கு அனுப்ப திட்டம்




ஏமாறவேண்டாம் என்கிறார் விமல் வீரவன்ச
சரத் பொன்சேகாவை காட்டி வாக்குகளைப் பெற்று பின்னர் சுனில் ஹந்துன்நெத்தியை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி தீட்டியுள்ளது.

எனினும் இந்த திட்டத்துக்குள் சிக்கி ஏமாற வேண்டாம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கொழும்பு மாவட்ட வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது- அரசியலமைப்பின் 89 (இ) மற்றும் 91 (1) (அ) ஆகிய ஷரத்துக்கள் மூலம் ஒருவர் பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான தகுதி பற்றி விளக்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் இரு வழக்குகள் விசாரணையில் உள்ளன.

தற்போதைய நிலையில் அவர் அந்த வழக்குகளில் குற்றவாளியாக காணப்படும் சாத்தியமே அதிகமாக உள்ளது. சரத் பொன்சேகா இவ்வாறு குற்றவாளியாக தண்டனைக்குள்ளாகுமிடத்து ம. வி. மு. வேட்பாளர் சுனில் ஹந்துன்நெத்தியை சரத் பொன்சேகாவுக்கு பதிலாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே ம. வி. மு. திட்டமாகும். பொன்சேகாவை கூடிய வாக்குகளைப் பெற்று அவருக்கு பதில் ஹதுன்நெத்தியை பாராளுமன்றம் அனுப்பும் ம. வி. மு. சதியில் எவரும் ஏமாந்துவிடக் கூடாது என்று தனது அறிக்கையில் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக