11 மார்ச், 2010

புளொட் முக்கியஸ்தர்கள் நெடுங்கேணியில்



புளொட் முக்கியஸ்தர்கள் அடங்கிய தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) வவுனியாவின் நெடுங்கேணிக்கு விஜயம் செய்துள்ளனர். புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புளொட் வேட்பாளருமான திரு .சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும்; முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுத் தேர்தலில் புளொட் வேட்பாளருமான திரு.வை.பாலச்சந்திரன், புளொட் இயக்க முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான திரு.ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரே நெடுங்கேணிக்கு விஜயம் செய்துள்ளனர். மேற்படி விஜயத்தின்போது இந்த தூதுக்குழுவினர் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்களுக்கான நிவாரணம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட விடயங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததுடன், இவ்விடயங்களை உரியவர்களின் கவனத்திற்கும் கொண்டுவருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக