11 மார்ச், 2010

நளினி வழக்கு விசாரணையை இழுத்தடிப்பதாக நீதிமன்றம் குற்றச்சாட்டு





நளினியின் விடுதலை தொடர்பான வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நளினி விடுதலை தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை தாக்கல் செய்வதற்கு 2 வார கால அவகாசம் கேட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களிடமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை வழங்குவதற்குப் போதிய கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள் அரசு தரப்பில் கேட்கப்பட்ட 2 வார கால அவகாசத்தை நிராகரித்து தமிழக அரசு நாளை இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

நளினியை விடுதலை செய்வது குறித்த இந்த அறிக்கை தொடர்பான கருத்துப் பகிர்வுகள் சில மாதங்களாக இழுபட்டு வரும் நிலையிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக