4 ஜனவரி, 2010

சந்திரசேகரனின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

மறைந்த அமைச்சர் சந்திரசேகரனின் பூதவுடல் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமானது. தலவாக்கலை நகரசபை மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்து அமைச்சரின் பூதவுடலுக்கு கண்ணீருடன் விடைகொடுத்தனர்.
வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு தலவாக்கலையிலுள்ள அமைச்சரின் இல்லத்திலிருந்து பிற்பகல் 3 மணியளவில் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
தலவாக்கலை நகர சபை மைதானத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழக அமைச்சரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் இறுதி நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தார்.
அமைச்சர்கள்,பிரதியமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் ஆலோசகர்கள், கட்சித் தலைவர்கள்,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அஞ்சலிக் கூட்டத்தின் பின்னர் மாலை 6 மணியளவில் அமைச்சரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
மேலும் இங்கே தொடர்க...

தேர்தலை கண்காணிக்க 4 அமைப்புகளுக்கு அனுமதி

ஜனவரி 26 இல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதாகவும் நீதியானதுமாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்த அரசசார்பற்ற 4 அமைப்புகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. அரசசார்பற்ற 4 அமைப்புகளுக்கு இதற்கான அனுமதியை தேர்தல் திணைக்களம் வழங்கியுள்ளது. இந்த அமைப்புகளைச் சேர்ந்த தலா இரு பிரதிநிதிகள் வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு அமைப்புஇ தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் என்பன வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான பிரசார அமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு கட்டமைப்பு என்பன வெளியிலிருந்து தேர்தலை அவதானிக்கும். தேர்தல் திணைக்கள ஆலோசகர் பந்துல குலதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் அவதானிகளாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொது நலவாய நாடுகளை சேர்ந்தோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று முன்னர் இலங்கை தெரிவித்திருந்தது. இதேவேளை, 2008 வாக்களர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று குலதுங்க கூறியுள்ளார்.

மேலும் இங்கே தொடர்க...

ததேகூ இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை:கூட்டம் தொடர்கிறது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் கூடியுள்ள போதிலும் மாலை வரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை. இருப்பினும் கூட்டம் தொடர்ந்தும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் எம்.கே.சிவாஜிலிங்கம், சந்திரநேரு சந்திரகாந்தன் (தற்போது லண்டன்), எஸ்.ஜெயானந்தமூர்த்தி (தற்போது லண்டன்) த.கனகசபை (தற்போது இந்தியா ), சதாசிவம் கனகரத்தினம் (தடுப்புக் காவல்) தவிர்ந்த ஏனைய 17 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு எம்.கே. சிவாஜிலிங்கம்,சிவநாதன் கிஷோர் மற்றும் என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படாத போதிலும சிவாஜிலிங்கம் தவிர்ந்த ஏனைய இருவரும் கலந்து கொண்டனர்.

இன்று காலை 10 .30 முதல் பிற்பகல் 2.00 மணி வரை பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் பிரதான வேட்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக தலைவர் இரா.சம்பந்தன் விளக்கிக் கூறியதாகத் தெரிய வருகின்றது.

இத்தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் பகிரங்கமாக வெளியிடப்பட்டு வந்த கருத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல்களின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ள அதேவேளை, தமிழ் வேட்பாளரரையும் ஆதரிப்பதில்லை என்று தீர்மானித்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.

இன்று மாலை 4.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கூடியுள்ளனர்.

ஆட்சி மாற்றமா? தேர்தல் பகிஷ்கரிப்பா? ஆகிய விடயங்கள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
மேலும் இங்கே தொடர்க...

பலாலி விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் : ஜெனரல் சரத்

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதுடன் பருத்தித்துறை துறைமுகத்தையும் சர்வதேச துறைமுகமாக அபிவிருத்தி செய்வதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்திருப்பதால் சில அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கும், சில பாதுகாப்பு வலயங்களின் எல்லையைக் குறைப்பதற்கும் முடியும்.


அனைவருக்கும் சமமான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுத்து, ஒழுக்கம் நிறைந்த நாட்டை உருவாக்கி சகல பிரஜைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே தனது நோக்கம் என ஜெனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
மேலும் இங்கே தொடர்க...

ஆயுத ஊழல் குற்றச்சாட்டு குறித்து விவாதிப்பதற்கு சரத் பொன்சேகா தயார்- விஜயத ஹேரத்

ஆயுத ஊழல் பற்றிய விவாதம்; சவாலை ஏற்றது ஜெனரல் தரப்பு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு எதிராக அரசுத் தரப்பினர் முன்வைத்திருக்கும் ஆயுத ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக விவாதிப்பதற்கு சரத் பொன்சேகா எப்போதும் தயாராகவுள்ளார் என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டி இதனைத் தெரிவித்தார் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொன்சேகாவின் பேச்சாளருமான விஜித ஹேரத்.
அவர் அங்கு கூறியவை வருமாறு: அரசு முடிந்தால் ஆயுத ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக சரத் பொன்சேகாவை நீதிமன்றம் வரை கொண்டு சென்று பார்க்கட்டும். மேலும் இந்த விடயம் தொடர்பாக எந்த நேரத்திலும் விவாதிக்க அவர் தயாராக உள்ளார். விமல் வீரவன்ஸ எம்.பி. தெரிவித்துள்ள ஆயுத ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதிக்கவும் நாம் தயார். என்றார் அவர்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனநாயகத்தையும்இ நீதியையும் மலரச் செய்யவே ஜே.வி.பியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்-ரணில்

நாட்டில் ஜன நாயகத்தை நிலை நாட்டவும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சினை உட்பட நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினை களைத் தீர்க்கவும் ஐ.தே.கவும் ஜே.வி. பியும் இணைந்து செயற்படுவதற்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக எதிர் காலத்தில் ஜனநாயகத்தையும் நீதியையும் மலரச்செய்ய முடியும்.

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரம சிங்க நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு: மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை ஏற்கனவே நாம் ஆரம்பித்துவிட்டோம். இதற்காக புதிய தோர் அரசமைப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது தொடர்பாக தொடர்ச்சி யான கலந்துரையாடல்களை பல்வேறு கட்சிகளுடனும் நடத்தி வருகின்றோம்.
குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளுடனும் இத் தகைய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணப்படும். இதுநாள் வரையும் காலத்தை இழுத்தடிப்பதற்கே இத்தகைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை புதிய அரசமைப்பின் கீழ்இ சக்திமிக்க நாடாளுமன்றக் குழுவை அமைத்து மிக விரைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்.

சர்வாதிகார ஆட்சி புரியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அகற்றி சரத் பொன்சேகாவை ஜனாதியாக்க நாம் முயற்சிப்பது ஜனநாயகம்இ நீதிஇ கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நாட்டில் மீண்டும் நிலைநாட்டுவதற்கே. இதற்காகத் தான் எதிரும் புதிருமாக இருந்த ஐ.தே.கவும்இ ஜே.வி.பியும் இணைந்து செயற்படுகின்றன.
இதேபோல வருங்காலத்திலும் இனப்பிரச்சினை உள்ளிட்ட சகல பிரச்சினைகளையும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயற்பட்டு தீர்வுகாண்போம். மீண்டும் ஒரு தடவை தமது உரிமைகளுக்காகத் தமிழ் மக்கள் போராடுவதற்குத் தேவையற்ற வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைந்திருக்கும். இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் விரிவாக ஆராய்ந்துள்ளோம். மஹிந்த ஆட்சியின் விளைவாக இன்று வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் கூட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலைநகரில் பல இடங்களில் இத்தகைய பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன. இதுதவிர தெனியாயவிலும் குருநாகலிலும் மஹிந்த குடும்பத்தின் சொத்துக்கள் உள்ள இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாறி வருகிறன்றன. யுத்தம் நிறைவடைந்து விட்டதாக அரசு அறிவித்து பல மாதங்கள் கடந்த பின்னரும் இன்னமும் அவை விலக்கிக்கொள்ளப்படவேயில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

3 ஜனவரி, 2010

வவுனியாவில் பொது சுகாதார பிரிவுகள்தோறும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாண ஆளுனர் நிதியில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.


டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழித்து துப்பரவு செய்வது குறித்து பொதுமக்கள், மாணவர்கள், திணைக்களங்கள், நிறுவனங்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன், இது குறித்த பயிற்சியை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.




டெங்கு நோய் ஒழிப்பு நடவடிக்கைக்கென மாவட்டம் தழுவிய அளவில் செயலணி குழுவொன்று ஆளுனரினால் அமைக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றது. இந்த செயலணி குழுவின் தலைவராக டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.




டெங்கு நோயினால் இதுவரையில் வவுனியாவில் 22பேர் உயிரிழ்ந்துள்ளதாகவும், 1100 இக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




இதற்கிடையில் வவுனியா பிரதேசத்தில் உள்ள 9 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளும் 9 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, அவற்றில் தகுதிவாய்ந்த அதிகாரிகள் பொறுப்பாக நியமிக்கப்பட்டு, டெங்கு நோய்த்தடுப்பு பணிகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மேலும் இங்கே தொடர்க...

ஜனநாயகத்தையும், நீதியையும் மலரச் செய்யவே ஜே.வி.பியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம் - ரணில் விக்கிரமசிங்க


நாட்டில் ஜன நாயகத்தை நிலை நாட்டவும் அரசியல் ரீதியாக இனப்பிரச்சினை உட்பட நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினை களைத் தீர்க்கவும் ஐ.தே.கவும் ஜே.வி. பியும் இணைந்து செயற்படுவதற்கான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக எதிர் காலத்தில் ஜனநாயகத்தையும் நீதியையும் மலரச்செய்ய முடியும்.


இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க. தலைவருமான ரணில் விக்கிரம சிங்க நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு: மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முயற்சிகளை ஏற்கனவே நாம் ஆரம்பித்துவிட்டோம். இதற்காக புதிய தோர் அரசமைப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது தொடர்பாக தொடர்ச்சி யான கலந்துரையாடல்களை பல்வேறு கட்சிகளுடனும் நடத்தி வருகின்றோம். குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சகல கட்சிகளுடனும் இத் தகைய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றின் மூலம் இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணப்படும். இதுநாள் வரையும் காலத்தை இழுத்தடிப்பதற்கே இத்தகைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை புதிய அரசமைப்பின் கீழ், சக்திமிக்க நாடாளுமன்றக் குழுவை அமைத்து மிக விரைவாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்.


சர்வாதிகார ஆட்சி புரியும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அகற்றி சரத் பொன்சேகாவை ஜனாதியாக்க நாம் முயற்சிப்பது ஜனநாயகம், நீதி, கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நாட்டில் மீண்டும் நிலைநாட்டுவதற்கே. இதற்காகத் தான் எதிரும் புதிருமாக இருந்த ஐ.தே.கவும், ஜே.வி.பியும் இணைந்து செயற்படுகின்றன.

இதேபோல வருங்காலத்திலும் இனப்பிரச்சினை உள்ளிட்ட சகல பிரச்சினைகளையும் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து செயற்பட்டு தீர்வுகாண்போம். மீண்டும் ஒரு தடவை தமது உரிமைகளுக்காகத் தமிழ் மக்கள் போராடுவதற்குத் தேவையற்ற வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு அமைந்திருக்கும். இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனும் விரிவாக ஆராய்ந்துள்ளோம்.


மஹிந்த ஆட்சியின் விளைவாக இன்று வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் கூட அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தலைநகரில் பல இடங்களில் இத்தகைய பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றன. இதுதவிர தெனியாயவிலும் குருநாகலிலும் மஹிந்த குடும்பத்தின் சொத்துக்கள் உள்ள இடங்கள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக மாறி வருகிறன்றன. யுத்தம் நிறைவடைந்து விட்டதாக அரசு அறிவித்து பல மாதங்கள் கடந்த பின்னரும் இன்னமும் அவை விலக்கிக்கொள்ளப்படவேயில்லை என்றார்.
மேலும் இங்கே தொடர்க...

தோழனே! வரலாறு உன் வாழ்வை மீட்டுத்தரும்- (தோழர் சுந்தரம் நினைவாக)

‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், விடுதலை அமைப்புக்களுக்கிடையேயான கருத்து முரண்பாடுகளுக்கும், ஆளுமைப்போட்டிக்கும் சகோதரப் படுகொலைகளே தீர்வு‘ என இனத்தின் அழிவு யுத்தத்திற்கு முதல் அத்திவாரமிட்ட நாள் 02.01.1982. ஆம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும், அதன் முதல் படைத்தளபதியும், "புதியபாதை" ஆசிரியருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(தோழர் சுந்தரம்) புலிகளின் தலைவர்(பின்னாள்) பிரபாகரனால் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்டு இன்று 28 வருடங்கள்.

70க்களின் முற்கூறுகளில் சிங்களப் பெருந்தேசியவாதம் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தோழர் சுந்தரம் "ஆற்றல்மிகு கரங்களிலே ஆயுதமேந்துவதே மாற்றத்திற்கான வழி, மாற்றுவழி ஏதுமில்லை"என கண்டார். விடுதலைப் போராட்ட வரலாறுகளைத் தேடித்திரிந்து கற்றார். அன்றிருந்த பொதுவுடமை தலைவர்களிடம் பழகி, பொதுவுடமை கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டார்.

தமிழீழ விடுதலையை வேண்டிநின்ற தோழர் சுந்தரம், "தனிமனித பயங்கரவாதமும், வெறும் வீரதீர சம்பவங்களும் அடக்கியொடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் விடுதலையைப் பெற்றுத் தந்துவிடாது. மாறாக, போராட்டமானது முழு மக்களையும் இணைத்ததாக, எதிரிகளை சரியாக இனங்கண்டு நட்பு சக்திகளுடன் கைகோர்த்து முன்னெடுக்கப்பட வேண்டியது. தமிழீழ விடுதலையென்பது வெறும் மண் மீட்பு அல்ல. அது, எமது மக்களின் சமூக-பொருளாதார விடுதலையையும் குறித்ததானது" என்ற கருத்தியல் அடிப்படையில் கழகத்தை வளர்த்த தோழர்களில் தோழர் சுந்தரம் முதன்மையானவர்!


தொலைநோக்கு அரசியல், அசாத்திய துணிவு, நேர்மை, கடின உழைப்பு, தன்னலங்கருதாத தியாகம், இவற்றிக்குமப்பால் மனித நேயம், தோழமை இவையெல்லாம் ஒருசேர்ந்த மக்களை நேசித்த மகத்தான, சமூக போராளி சுந்தரம்.


கருத்து முரண்பாடுகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பிளவுண்டு கலைந்தபோதும் தமிழ் மக்களின் உண்மையான விடுதலையை வேண்டி முற்போக்கு சிந்தனை கொண்ட போராளிகளுடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை நிறுவி அதன் படைத் தளபதியாகவும், அதேவேளை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஏடான "புதியபாதை"யின் ஆசிரியராகவும் இறுதிவரை உழைத்தார். புதியபாதையில் அன்று அவர் தவறுகின்ற தமிழ் தலைமைகளையும், பிற்போக்குவாத சக்திகளையும் தயவுதாட்சண்யமின்றி விமர்சனத்திற்குள்ளாக்கினார். மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்தினார். அதேவேளை "புளொட்"டின் படைத்தளபதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலாக ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தை முற்றாக தாக்கியழித்து வரலாறு படைத்தார். ஒரு தொலைநோக்குள்ள பத்திரிகையாசிரியராகவும், சிறந்த படைத்தளபதியாகவும், மனித நேயமிக்க போராளியாகவும், பல்வேறு பரிமாணங்களை கொண்ட தோழர் சுந்தரம் மரணம்வரை மக்களின் வாழ்வை நேசித்தார்.


02.01.1982அன்று "புதியபாதை" பணி தொடர்பாக யாழ்.சித்திரா அச்சகத்தில் முகாமையாளருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, பாசிஸ்ட் பிரபாகரனால் கோழைத்தனமாக மறைந்திருந்து தோழர் சுந்தரம் படுகொலை செய்யப்பட்டார். "புதியபாதை" அச்சிட்ட அதே சித்திரா அச்சகத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அழிவுவரலாற்றுக்கான முதல் எழுத்தும்
எழுதப்பட்டதென்பதை தவிர வேறு என்ன சொல்ல...?


"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடியும் தர்மம் வெல்லுமெனும் மருமத்தை நம்மால் உலகம் கற்கும்."

எங்கள் பெருமதிப்பிற்குரிய தோழனே! வரலாறு உன் வாழ்வை மீட்டுத்தரும்.

மேலும் இங்கே தொடர்க...

2 ஜனவரி, 2010

ஆலமரம் போன்ற பெருவிருட்சம் இ.தொ.கா. விலகிச்செல்வோரால் முறிந்துவிடப்போவதில்லை - ஆறுமுகம் தொண்டமான்

மலையக மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளப் போவதாகச் சரத் பொன்சேகா கூறுகிறார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவோ அப்பணிகளை கடந்த 4 வருடங்களாக முன்னெடுத்து வருகிறார். அதுவே ஜனாதிபதிக்குப் பலமாகவுள்ளதென இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு 05, வஜிரா வீதியிலுள்ள அவ் அமைச்சின் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அச்சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இம்முடிவு தொடர்பாக மாற்றுக் கருத்து கொண்டுள்ள சிலர் எமது கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அதற்காக அவர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ள போதிலும் அவை திருப்திகரமானதாகவில்லை. அவர்கள் கூறும் காரணங்களின் படி அவர்கள் தேர்தல் அறிவிப்பின் முன்னரோ, அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ கட்சியை விட்டு விலகிச் சென்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் அறிவிப்பின் பின் அவர்கள் வெளியேறியமை அவர்களின் சுயநலப் போக்கையே வெளிக்காட்டுகின்றது.

அதைத் தவிரவும், எமது கட்சி எமது பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதல் ஒரே கொள்கையில் உறுதியாகவுள்ளது. கொடுத்த வாக்கை மீறுவதில்லை. அதே நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளோம்.அத்துடன் எமது கட்சி உறுப்பினர்கள் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தோம். அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை. வெளியேறுபவர்களை தடுத்து நிறுத்தவும் எம்மால் முடியாது. அவர்கள் வெளியேறியமைக்கான சரியான காரணமும் தெரியாது. அந்தக் காரணத்தை அவர்களிடமே கேட்க வேண்டும் அல்லது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷ மலையக மக்களின் பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் வெற்றி பெறுவார் என்பது உறுதி. ஏனெனில் கடந்த 4 வருடங்களில் அத்தகைய பெறுமதி மிக்க அபிவிருத்திப் பணிகளை மலையகத்தில் மேற்கொண்டுள்ளாரெனக் கூறினார்.தொடர்ந்து, மேலும் சில உறுப்பினர்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விட்டு வெளியேறப் போவதாக ஊகங்கள் வெளியிடப்படுவது தொடர்பாக அமைச்சரிடம் கருத்துக் கேட்டபோது அவ்வாறு யாரும் வெளியேற மாட்டார்கள் என நம்புவதாகவும் விலகிப் போனாலும் தன்னால் தடுக்க இயலாதெனவும் ஆனால் அவ்வாறு விலகுபவர்களால் ஆலமரம் போன்ற கட்சிக்கு எவ்வித பாதிப்புமில்லையெனவும் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...