23 நவம்பர், 2009

திர்வரும் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி



பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு முன்னர் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அவர் பணித்துள்ளார்.எனினும் தேர்தல் நடைபெறும் தினம் குறித்து எதுவும் அறிவிக்கவில்லை.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.டபிள்யூ. எம் தேஷபிரிய எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்
மேலும் இங்கே தொடர்க...
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு இன்று வெளியிடப்படும்


தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பு இன்று திங்கட்கிழமை நள்ளிரவில் வெளியாகும் என்று தெரிய வருகிறது. பெரும்பாலும் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படும் என்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தேர்தல் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பின் பின்னர் தேர்தல் நடைபெறும் தினம் மற்றும் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை தேர்தல்கள் ஆணையாளர் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எந்தத் தேர்தல் முதலில் நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் சம்மேளனத்தில் அறிவிக்கப்படவில்லை. அதேவேளை கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைப்பாளர்களை சந்தித்து பேச்சு நடத்திய ஜனாதிபதி விரைவில் பிரதான தேர்தல் ஒன்றுக்கு தயாராகுமாறு கோரியிருந்தார். அதனையடுத்தே இன்று திங்கட்கிழமை தேர்தல் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது
மேலும் இங்கே தொடர்க...
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்-ஜே.வி.பி. கோரிக்கை



ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். எதிர்கால அரசியலில் அரசாங்கத்துக்கு சவாலாக அமையவுள்ள சரத் பொன்சேகாவுக்கு தற்போதைய நிலையில் ஆபத்தெதுவும் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் அவருடன் இன்னமும் இரு தினங்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் அவர் கூறினார். ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கவுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் தற்போது சூடுபிடித்துள்ள அரசியல் களத்தில் அனைவராலும் பேசப்படுபவர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆவார். இவர் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்கால அரசியலில் சவாலாக இருப்பார் என்ற அச்சத்தினால் அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கெடுபிடிகளை செய்து வருகின்றது.

உண்மையில் சரத் பொன்சேகா மிகவும் உயிர் அச்சுறுத்தல் உள்ள நபர் என்றப்படியால் அவருக்கு கூடிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஜெனரலின் பாதுகாப்பினை அரசாங்கம் குறைப்பது ஆபத்தானது. எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கூடிய பாதுகாப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

நாட்டில் முப்பதாண்டு கால யுத்தம் முடிவடைந்துள்ளபோதும் ஜனநாயகத்தை ஏற்படுத்தாத சூழலே காணப்படுகின்றது. எனவே, சிறந்த தலைமைத்துவம் மிக்க ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடைப்பெறவுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை அழிந்துப்போன புலிகள் மீது சுமத்திவிட்டு மௌனம் சாதிக்க அரசாங்கம் முயற்சி செய்யக்கூடாது.
மேலும் இங்கே தொடர்க...
மாவீரர்,போராளிகளின் அர்ப்பணிப்புக்களை கொச்சைப்படுத்தாதீர்



மாவீரர்,போராளிகளின் அர்ப்பணிப்புக்களை கொச்சைப்படுத்தாதீர் என்ற தலைப்பில் கனடாவில்புளொட் துண்டுபிரசுரம்! கனடாவின் ரொறன்ரோ, மொன்றியல் மாநிலங்களில் புளொட்இயக்கத்தின் கனடா கிளையினரால் துண்டு பிரசுரம் ஒன்று வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகதெரியவருகின்றது. போராட்டம் என்ற பெயரில் கனடாவில் மேற்கொள்ளப்படும் வியாபாரநடவடிக்கைகளை கண்டித்தும் அதற்காக தம்முயிர்களை அர்ப்பணித்துள்ள மாவீரர்கள்,போராளிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் அவ் துண்டு பிரசுரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நேற்று சனிக்கிழமை மாலைவரை10,000க்கு மேற்பட்ட பிரதிகள் வரை விநியோகம் செய்யப்பட்டதாகவும், இதனைபொதுமக்களும், வர்த்தகர்களும் ஆர்வத்துடன் வாங்கி தமது ஆதரவினை புளொட்இயக்கத்தினருக்கு வழங்கியுள்ளதுடன், கடந்த காலங்களில் போராட்டம் என்ற பெயரில்ஏமாற்றப்பட்டதையும் அவ் மக்கள் கண்ணீர் மல்க நினைவுமீட்டதுடன், போராட்டம் என்றபெயரில் பணவசூலிப்பு செய்தவர்கள் பற்றியும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.இந்து ஆலயங்கள், தமிழ்வர்த்தக நிலையங்கள், தேவாலயங்கள் போன்ற பகுதிகளில்கணசமான புளொட் உறுப்பினர்கள் பரவலாக நின்று துண்டுபிரசுரங்களை நேரடியாகவேமக்களின் கைகளில் கொடுத்ததை காணமுடிந்தது. இவ்வாறு துண்டுபிரசுரம் வினியோகம்
செய்யப்பட்டதை கண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தனது வாழ்த்துக்களை பிரசுரம்வினியோகம் செய்து கொண்டிருந்த புளொட் உறுப்பினர்களுக்கு தெரிவித்ததுடன், இவ்நடவடிக்கையானது கனேடிய மண்ணில் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக மாற்றம்காணப்படுவதற்கு ஒர் எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார்.

மேலும் இங்கே தொடர்க...
ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு கழக வட்டாரங்கள் தெரிவித்தன.General India news in detail

பாலாசூர் : அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அக்னி-2 ஏவுகணைச் சோதனையை முதல் முறையாக இரவு நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம் பாட்டு கழக வட்டாரங்கள் கூறியதாவது: அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று இலக்கை தாக்கக் கூடிய வகையிலான அக்னி-2 ஏவுகணை வடிவமைக்கபட்டுள்ளது.



இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இது குறித்த சோதனை நடத்துவதற்கான இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த ஏவுகணை, 2,000 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு டன் எடையுள்ள வெடி பொருட்களை தாங்கிச் செல்லும் திறன் உடையது. இந்த ஏவுகணைச் சோதனை முதல் முறையாக இரவு நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேற்பாட்டு கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இங்கே தொடர்க...

பாதுகாப்பு வீரர்களுக்கான ‘ரணஜயபுர’
நேற்று ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

1500 வீடுகளுடன் சகல வசதிகளும் உள்ளடக்கம்

அநுராதபுர இப்பலோகமவில் அரசாங்கத்தால் பாதுகாப்புப் படை வீரர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள ‘ரணஜயபுர’ வீடமைப்புத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து படையினர்களிடம் கையளித்தார்.

180 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணியில் சகல வசதிகளையும் கொண்ட 1509 வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

புதிய வீடுகளுடன் மருத்துவ நிலையம், சிறுவர் பாடசாலை, வங்கி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் அழகிய அமைதி சூழ்ந்த பிரதேசத்தில் இவ்வீடுகள் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று முற்பகல் மேற்படி ‘ரண ஜயபுர’ வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ படை வீரர்களின் பிள்ளைகளால் வரவேற்கப்பட்டார்.

முப்படைத் தளபதிகள் மற்றும் படை உயரதிகாரிகளுடன் உள்நாட்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, கெஹெலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன, அநுர பிரிய தர்ஷன யாப்பா, சுசில் பிரேம ஜயந்த, மிலிந்தமொரகொட ரஞ்சித் சியம்பலாபிடிய, உட்பட அமைச்சர்கள், ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

படைவீரர்களுக்கான இவ்வீடமைப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரணஜயபுர பாடசாலையைக் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தார்.

இலங்கை வங்கிக் கிளையை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடியவும் சுகாதார மத்திய நிலையத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், கார்கில்ஸ் பூட்சிட்டி நிறுவனத்தை வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்கவும், சிறுவர் பாடசாலையை ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

மேலும் இங்கே தொடர்க...

22 நவம்பர், 2009

நிவாரணக் கிராமங்களில் கட்டுப்பாடுகள் நீக்கம்

எந்த நேரத்திலும் எங்கும் சென்றுவரலாம்

வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு இதுவரை காலமும் விதிக்கப் பட்டு வந்த சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் விதத்தில் இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பிற்கமைய வவுனியா மனிக்பாம் நிவாரணக் கிராமத்திற்கு விஜயம் செய்த பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று இந்த அறிவித்தலை விடுத்தார். இவ்வறித்தலின்படி நிவாரணக் கிராமத்திலுள்ள அனைவரும், நாட்டிலுள்ள எப்பகுதிக்கும் சென்றுவர முடியும். அதேநேரம், உறவினர்களையும் அவர்கள் பார்க்கவும் முடியும்.

ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் நிவாரணக் கிராமத்தில் எஞ்சியுள்ள அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்பதுடன் மீளக் குடியேறும் மக்களுக்கு இதுவரை வழங்கிய 25,000 ரூபா கொடுப்பனவு டிசம் பர் 15 ஆம் திகதி முதல் 50,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ நேற்று அறிவித்தார்.

வவுனியா நிவாரணக் கிராமங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் தங்க வைக்கப்பட்டி ருந்த மக்கள் முகாமைவிட்டு வெளியேற முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டி ருந்தன. உறவினர்கள் வந்து பார்ப்பதோ அல்லது முகாமிலிருந்து மற்றொரு முகாமுக்கு செல்வதோ தடுக்கப்பட்டிருந்தது. டிசம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் இவை அனைத்தும் நீக்கப்படுவதுடன் அவர்கள் சுதந்திரமாக செல்ல முடியும். இப்பகுதியி லிருந்து மக்கள் சென்றுவர பஸ் போக்கு வரத்து வசதிகளும் செய்யப்பட வுள்ளன.

மீளக் குடியமர்த்தப்படும் மக்களுக்கு வழங்கப்படும் கூரைத் தகடுகளின் எண் ணிக்கை இரட்டிப்பாக்கப்படும். மேலும் 6 மாதங்களுக்கு உலர் உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் பசில் ராஜபக்ஷவுடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வன்னி கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண, வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

‘இடம்பெயர்ந்துள்ளவர்களுள் தற்போது சுமார் 50 வீதத்துக்கும் குறைவானவர்களே இன்னமும் நிவாரணக் கிராமங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விரைவில் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்.

இடம்பெயர்ந்தவர்கள் என நாட்டில் ஒருவரும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்திலேயே எமது அரசு செயற்படுகிறது, என அங்கு உரையாற்றிய ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

வடக்கில் நிவாரணக் கிராமத்திலுள்ள மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல் களுக்கு அமைய பசில் ராஜபக்ஷ எம்.பி. அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பொன்றை விடுப்பார் என நேற்று முன்தினம் அமைச் சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.

வவுனியா சென்ற பசில் ராஜபக்ஷ எம்.பி. வவுனியா நிவாரணக் கிராமங் களிலுள்ள மக்களை சந்தித்து உரையாடிய துடன் அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பையும் விடுத்தார்.

தற்போது வவுனியா நிவாரணக் கிராமங்களில் 1,27,495 பேரளவில் மட்டுமே உள்ளனர். இவர்களும் ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக மீளக்குடியமர்த்தப்படுவதுடன் அடுத்த கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுவிடும் என ஆளுநர் ஜீ. சந்திரசிறி தெரிவித்தார். (ள – ரு – வ)

மேலும் இங்கே தொடர்க...
ஓசியானிக் கப்பலிலிருந்து வெளியேறியோர் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படும் சாத்தியம்


இந்தோனேசிய மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் உறுதிமொழிகளின் அடிப்படையில்,இந்தோனேசியாவில் தரித்திருந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறிய 78 இலங்கையர்களும் மூன்றாம் நாடு ஒன்றுக்கு மாற்றப்படுவர் என இந்தோனேசியா அறிவித்துள்ளது.

" எமது நாட்டு எல்லையில் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் தங்குவதற்கு தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. இவர்களுக்கு விரைவில் மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும்" என ஜகார்த்தாவிலுள்ள வெளிவிவகார விடயங்களுக்கான திணைக்களத்தின் பேச்சாளர் ரேகு பைசாயா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் தரையிறங்கிய இவர்கள் தற்போது இந்தோனேசியாவின் ரியூ தீவில் உள்ள டன்ஜுன் பினாங் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பேரவை அகதி அங்கீகாரத்தை வழங்காதுபோனால், அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுவர் என இந்தோனேசியா எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் இவர்களின் எதிர்காலம் குறித்து அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பேரவை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவின், உறுதிமொழியை நம்பி 22 அகதிகள் முதலில் கப்பலில் இருந்து இறங்கினர். இதன் பின்னரே ஏனையோரும் தரையிறங்கினர். இதேவேளை 250 அகதிகளை கொண்டுள்ள இலங்கையர்களின் மற்றும் ஒரு கப்பல் இன்னமும் இந்தோனேசியாவில் தரித்து நிற்கிறது
மேலும் இங்கே தொடர்க...
கிழக்கு மாகாண சபையின் வரவி-செலவுத் திட்டத்தை தோற்கடித்து செயற்பாடுகளை முடக்க முயற்சி

மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடித்து, அதன் செயற்பாடுகளை முடக்குவதற்கும் முதலமைச்சரை மாற்றுவதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கிழக்கு மாகாண சபையின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கிழக்கு மாகாண சபையின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி இது வாக்கெடுப்புக்காக விடப்படும் போது எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலரும் எதிராக வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளனரெனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் 19 பேர் ஆளும் கட்சியில் உள்ளனர். எதிர்க்கட்சித் தரப்பில் 17 பேர் தெரிவு செய்யப்பட்டாலும் ஒருவர் தொடர்ந்தும் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளாததன் காரணமாக 16 பேரே உள்ளனர். இந்த நிலையில் ஆளுந்தரப்பைச் சேர்ந்த நால்வரின் உதவியுடன் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பது தொடர்பில் எதிர்க் கட்சித் தரப்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச். எம். எம். பாயிஸ் வீரகேசரி வார வெளியீட்டுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்டனர். இவ்வாறானதொரு நிலை கிழக்கு மாகாண சபைக்கு ஏற்படக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டாலும் கிழக்கு மாகாண சபையைக் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் மாகாண சபை நிதியை எந்தவிதத்திலும் பயன்படுத்த முடியாத ஒரு முடங்கல் நிலையேற்படும். நிர்வாக ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஜனாதிபதியினது அல்லது மத்திய அரசின் நிதியினைக் கொண்டே அனைத்தையும் செய்ய வேண்டிய நிலைக்குள் மாகாண சபை தள்ளப்படும். கிழக்கு மாகாண சபையின் இந்த வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமானால் எதிர்காலத்தில் வேறு பிரேரணைகளையும் நிறைவேற்றிக் கொள்வதிலும் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாமெனவும் கூறினார்
மேலும் இங்கே தொடர்க...

21 நவம்பர், 2009

சுவீஸில் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான மாநாடு-

சுவீஸில் நடைபெற்று வரும் இலங்கை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையிலான மாநாட்டின் இறுதிநாள் இன்றாகும். சுவிஸின் பிறவுன் பீல்ட் மாநிலத்தில் பிரசித்திபெற்ற நதிகளில் ஒன்றான றைன் நதிக்கரையில் அமைந்துள்ள விடுதியொன்றில் இச்சந்திப்பு இன்றுடன் மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருகின்றது. இடம்பெயர்ந்தோரின் மறுவாழ்வு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது ஆராயப்படுவதாக கூறப்படுகின்றது. இக்கூட்டத்தில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) பொதுச்செயலர் தி.சிறீதரன், , தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிறேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்க் கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன், கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அதன் செயலர் ஹசன்அலி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலர் ஆறுமுகம் தொண்டமான், அமைச்சர் ரிசாத் பதியுதீன், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் பங்குபற்றியுள்ளனர்.

78 இலங்கை அகதிகளும் நான்கு வாரங்களுள் மூன்றாம் நாட்டுக்கு மாற்றப்படுவரென தகவல்-

இந்தோனேசியாவிலுள்ள ஓசியானிக் வைகிங் கப்பலிலிருந்து வெளியேறிய 78இலங்கை அகதிகளும் இன்னும் நான்கு வாரங்களுள் மூன்றாம் நாட்டுக்கு மாற்றப்படுவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் ரியூ தீவிலுள்ள டக்வின்டினா முகாமில் குறித்த 78 இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அவர்களுக்கு ஐ.நா சபையின் அகதிகள் பேரவை அகதி அந்தஸ்து வழங்காதவிடத்து அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பியனுப்பப்படுவர் என இந்தோனேசிய செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில் தமது நாடு அகதிகள் தஞ்சம்பெறும் நாடாக இருப்பதை தாம் விரும்பவில்லையெனவும், எனவே அகதிகள் ஒரு மாற்றுக் குடியேற்ற நடவடிக்கையினை தீர்மானிக்க வேண்டுமென்றும் இந்தோனேசிய வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஓசியானிக் கப்பலில் இருந்த 78அகதிகளும் மனிதாபிமான அடிப்படையிலேயே இந்தோனேசியாவில் தரையிறக்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவது தொடர்பில் பரிசீலித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

சுவிற்சர்லாந்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆதரவாளர்கள், பொதுமக்களுடனான கலந்துரையாடல்!


சுவிற்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(PLOTE) தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள். எதிர்வரும் 22.11.2009 ஞாயிற்றுக்கிழமை பி.ப15.00மணிக்கு.Schweighofstrasse 296, 8055 Zürich , Switzerland எனும் முகவரியில் உள்ள மண்டபத்தில் ஆதரவாளர்கள், பொது மக்களை சந்தித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமது மக்களின் நிகழ்கால, எதிர்கால நிலமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவிருக்கும் கருத்துப்பரிமாறலில் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சுவிஸ் கிளையினராகிய நாம் தோழமையுடன் அழைப்பு விடுக்கின்றோம்.

மேலதிக தொடர்புகட்கு:- 076 368 15 46 , 076 295 20 43 , 078 949 92 90

தகவல்: தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE)
சுவிஸ்கிளை

நலன்புரி நிலையங்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும் : பசில்


புலிகளுடனான போரின் போது அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் ஏற்படுத்தும் முகமாக, எதிர்வரும் டிசம்பர் முதலாந் திகதி அனைத்து நலன்புரி நிலையங்களும் திறந்த முகாம்களாக்க மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் முகாம்களில் உள்ள அனைத்து மக்களும் தமது சொந்த கிராமங்களுக்கு மீள் குடியேற்றப்படுவர்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள அனைத்து மக்களும் சுதந்திரமாக நடமாடக் கூடிய வகையில் தமது சொந்த இடங்களுக்கு மீளக் குடியேற்றப்படுவர்" என்றார்.

அகதிகளுக்கு முக்கியத்துவமிக்கதொரு விசேட அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று மனித உரிமைகள், இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிற்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி அனைவரையும் பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை


ஏற்படக்கூடிய பொருளாதார வீழ்ச்சி அனைவரது வாழ்க்கையையும் மிக மோசமாக பாதிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த நிலைமை காரணமாக இலங்கைக்கு பொருளாதார உதவி வழங்குவதென இந்த நிதியம் தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், எந்தவொரு நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் போது மிகவும் பாதிப்படையும் நிலையில் உள்ளவர்களே மேலும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்ததாக நிதியத்தின் வெளியுறவுத் திணைக்கள பணிப்பாளர் கரோலின் அற்கின்சன் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்துள்ளார். முகாமைப்பணிப்பாளரின் நவம்பர் 5ஆம் திகதிய அறிக்கையில் "மனித உரிமைகள் நிலைமை பற்றிய ஒருவரது அபிப்பிராயம் எப்படி இருந்தாலும்' என்று குறிப்பிடப்பட்டதன் அர்த்தம் சர்வதேச நாணய நிதியம் மனித உரிமை பேணலை கவனத்தில் எடுப்பதில்லை என்பதா? என்று அற்கின்சனிடம் கேட்கப்பட்டது. இந்தக் கூற்று மற்றவர்களை தவறான வழியில் இட்டுச் செல்கிறதா? என்பது மற்றுமொரு கேள்வியாகும். முகாமைப் பணிப்பாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் மனித உரிமைகள் பேணலின் முக்கியத்துவம் பற்றிய முகாமைப் பணிப்பாளரின் உணர்வையே அவரது கடிதத்தின் உள்ளடக்கம் நேரடியாக எடுத்துக் காட்டுகிறது என்றும் அற்கின்சன் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் தற்போது சரியோ பிழையோ எது நடந்தாலும் ஒரு பொருளாதார வீழ்ச்சி அனைவரின் வாழ்க்கையையுமே பாதிக்கும் என்பதே உண்மையாகும் என்று அற்கின்சன் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தத் தயார்- ஜே.வி.பி.அறிவிப்பு

சரத் பொன்சேகா இணக்கம் தெரிவித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக அவரை நிறுத்துவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.

இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் மிக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஜே.வி.பி. அறிவித்துள்ளது. எந்த தேர்தலை முதலில் வைப்பது என்ற தடுமாற்றத்தில் அரசாங்கம் உள்ளது. எத்தகைய தேர்தலையும் எதிர்கொள்ள ஜே.வி.பி. யும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தயாராகவே உள்ளன எனவும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது. ஜே.வி.பி. யின் விசேட செய்தியாளர் மாநாடு, நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இங்கு ஜே.வி.பி. யின் பிரசார செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் தற்போது தேர்தல்கள் தொடர்பான பேச்சுகள் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலையா அல்லது பாராளுமன்ற தேர்தலையா முதலில் அரசாங்கம் நடத்தும் என்ற குழப்பமும் கடந்த காலங்களில் தலைதூக்கியிருந்தது.

எவ்வாறாயினும் தேர்தல் குறித்த அறிவிப்பு ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் ஏமாற்றத்தையே பொது மக்கள் சந்தித்தனர். .

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பமே அரசாங்கத்திடம் தற்போது காணப்படுகின்றது. உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகள் ஏற்படாமையினால் பொது மக்கள் அரசாங்கம் மீது வெறுப்பைக் காட்டி வருகின்றனர்.

தேர்தல் வெற்றிகள் மூலம் தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் சிந்தித்தமையால் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது. சம்பள உயர்வுகளை வழங்க முடியாது எனக் கூறி வந்த அரசாங்கம் தற்போது திடீரென பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இதேபோன்று அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றது. அரசாங்கத்தின் இவ் விசேட செயற்பாடுகளின் பின்னணியில் தேர்தல்கள் மிக விரைவில் வரவிருக்கின்றன என்பது தெட்டத் தெளிவாகின்றது..

ஆனால் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்ற குழப்பம் இன்னும் அரசாங்கத்தை விட்டு அகலவில்லை. எவ்வாறாயினும் ஜெனரல் சரத் பொன்சேகா அரசாங்கத்திற்கு சவாலாக இருப்பார் என நினைத்து இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அவரை தேசத் துரோகியாக வர்ணித்து வருகின்றது.

அரசாங்கம் சர்வதேச சதி என்ற போர்வையிலேயே தமது ஆட்சியை முன்னெடுக்கின்றது. தேர்தல்களை வைத்து வேடிக்கை காட்டும் சந்தர்ப்பமாக எதிர்வரும் நாட்களை அரசாங்கம் எண்ணக் கூடாது. ஏனெனில் இலங்கையின் எதிர்காலம் எதிர்வரும் தேர்தலிலேயே தங்கியுள்ளன. சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய பொது மக்களின் நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய பொது வேட்பாளர் ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது. .

ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது
மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்- ஜெனரல் சரத் பொன்சேகா

தாய்நாடு இழந்துவரும் ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமூக சமநிலை மற்றும் இன ஒற்றுமை என்பவற்றை பாதுகாப்பதற்கு உயிரைப் பணயம் வைத்தேனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்தவர்களின் எதிர்கால முன்னேற்றம் கருதி அவர்களுடன் நிழலாக இருப்பேன் என்றும் அவர் வாக்குறுதியளித்துள்ளார். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

தாய் நாட்டுக்கு எதிராக நிலவிவந்த 30 வருட கால பயங்கரவாத்தை முற்றாக அழிப்பதற்கு இராணுவத்தினர் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். எனவே, அவர்கள் அனைவரும் இந்த வெற்றியின் பங்காளிகளாவர். உண்மையான தொழில்சார் இராணுவ வீரர்களாக யுத்தத்தை எதிர்கொண்டதன் விளைவாகவே பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள முடிந்தது. இந்த கம்பீரதன்மையை தொடர்ந்து இராணுவத்துக்குள் தக்கவைத்து கொண்டிருக்க வேண்டும். எந்தவொருவரும் இராணுவத்தின் கௌரவத்துக்கு களங்கம் விளைவிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. யுத்தத்தை வெற்றிகொண்டு தாய்நாட்டை காப்பாற்றிய இராணுவ வீரர்களை சிலர் தூற்றுவதற்கு முற்படுகின்றபோதிலும் யுத்த வெற்றியின் உண்மையான பங்காளர்கள் தாமே என்பதை இராணுவ வீரர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து விலகிக்கொண்டதன் காரணமாகவே 30 வருட கால பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை குறுகிய காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பங்காற்றிய இராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்துகின்ற அதேவேளை, வீரர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துவதற்கும் என்னால் முடியாது போயுள்ளது.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக சேவையாற்றிய மிகக் குறுகிய காலத்தில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போனதையிட்டு கவலையடைகிறேன். எனது 40 வருட கால சேவையின் நிறைவை முன்னிட்டு நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் முப்படைத் தளபதிகளுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமை காரணத்தால் இந்தக் கடிதம் இராணுவ வீரர்களுக்கு உரையாற்றக்கிடைத்த காரணியாக அமைந்துள்ளது.

எனது உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்புக்குக்கு 100 வீரர்களையாவது பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படாத அதேவேளை, தற்போது மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் 60 பாதுகாப்பு வீரர்களையும் 3 வாகனங்களையும் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெற்றதையடுத்து உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு கிடைத்துள்ளது. தற்போது வாடகை வீடொன்றை பெற்றுக்கொள்வதற்கும் பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
மேலும் இங்கே தொடர்க...