17 நவம்பர், 2011

வட, கிழக்கு மீள்குடியேற்றத்துக்காக 1336 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: கெஹலிய

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 97 வீதமானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 3110 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட உள்ளதோடு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக ஆயிரத்து 336 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்றுமுன் நடைபெற்ற அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஆயிரத்து 672 குடும்ங்களும் திருகோணமலை மூதூர் பகுதியில் 1272 குடும்பங்களும் மன்னாரில் 166 குடும்பங்களும் மீள்குடியேற்றப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக