12 ஜூலை, 2011

11 வயது சிறுவனிடம் பிரதேச அரசியல்வாதி பாலியல்

பிரதேச அரசியல்வாதி ஒருவர் 11 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ள சம்பவம் கொபெஹிகனை என்ற இடத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் செய்த முறைப்பாட்டை அடுத்து அந்த அரசியல்வாதி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் தனது இளைய சகோதரனுடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதன்போது, அப்பக்கமாக வருகை தந்த சந்தேக நபரான கொபெஹிகனை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர், தனிமையில் இருந்த மேற்படி 11 வயதுடைய சிறுவன் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டுள்ளார்.

தாய் வீட்டிற்குத் திரும்பியதும் பாதிக்கப்பட்ட சிறுவன் தனக்கு நேர்ந்தவற்றைத் தாயாரிடம் எடுத்துக் கூறவே அவர் பொலிஸில் முறைப்பாடு செய்தார். பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக