20 ஜூன், 2011

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 17 ஆவது கூட்டத்தொடர் முடிவு

ஜெனிவாவில் கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் நடைபெற்று வந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி. சில்வா ஆகியோரும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸும் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டத் தொடரின் முதல் நாள் அமர்வின்போது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றியிருந்தார். இந்த உரையில் யுத்தத்துக்கு பின்னரான இலங்கையின் நிலைமை தொடர்பில் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடர் இவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஜெனிவாவில் நடைபெறும் என்று மனித உரிமைகள் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

அந்த வகையில் மனித உரிமைப் பேரவையின் 18 ஆவது கூட்டத்தொடரிலும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவொன்று கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக