23 மே, 2011

கிழக்கு மாகாண சபை உறுப்பினர; கிருஸ்ணானந்தராஜாவை பார்வையிட உறவினர்களுக்கு பொலிஸார் அழைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர; கிருஸ்ணானந்தராஜாவை பார்வையிட உறவினர்களுக்கு பொலிஸார் அழைப்பு செயலாளர் தெரிவிப்பு
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஸ்ணானந்தராஜா அவர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைச் செயலகத்திலிருந்து கடந்த 16-05-2011 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு சந்தேகத்தின் பேரில், எதுவித காரணங்களும் வீட்டாருக்கோ அல்லது கட்சித் தலைமைக்கோ தெரிவிக்காமல் விசாரனைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட மாகாண சபை உறுப்பினரின் குடும்பத்தார் நாளை சனிக்கிழமை (21-05-2011) கொழும்பு 4ம் மாடிக்குச் சென்று காலை 09-00 –12-00 மணிக்குள் பார்வையிடலாம் என மட்டக்களப்பு பொலிஸார் அறிவித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கௌரவ கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் கொழும்புக்குச் சென்ற கட்சியின் உயர்மட்டக் குழுவினருக்கும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபப்~ அவர்களுக்கும் இடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்று முடிந்த பேச்சுவார்த்தையின் பயனாகவே குறித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கிருஸ்ணானந்தராஜா அவர்களை உறவினர்கள் நாளை பார்வையிடுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் மட்டக்களப்பில் அண்மையில் மதியழகன் என்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரின் கொலைச் சம்பவத்தில் இவருக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே விசாரணைக்கென்று கொழும்பிலிருந்து வந்த குற்றத் தடுப்பு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், அவரின் விடுதலை இன்னும் ஒரு வாரத்திற்கு விசாரணைகள் முடிந்த பிறகே விடுவிக்கப்படுவார் அல்லது நீதி மன்றத்தில் ஆஜராக்கப்படுவார் என்றும் நேற்றைய ஜனாதிபதி சந்திப்பின் போது கூறப்பட்டதாகவும் செயலாளர் எ.சி.கைலேஸ்வரராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக