1 ஏப்ரல், 2011

வடபகுதி முழுவதற்கும் மின்சாரம்: 1891 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் உப மின் நிலையம்






வடபகுதி முழுவதற்கும் மின்சார வசதி அளிக்கும் வகையில் கிளிநொச்சியில் புதிதாக மின் உப நிலையமொன்றை அமைக்கவும் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை மின் இணைப்புத் தொகுதியொன்றை நிர்மா ணிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 1891 மில்லியன் ரூபா செலவிடப்படும்.

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான 132 கிலோ வோர்ட் மின் இணைப்புத் தொகுதி யுத்தம் காரணமாக சேதமடை ந்தது. இதனை மீள அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டங்களின் முடிவில் வடபகுதிக்கு முழுமையாக மின்சார வசதி அளிக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பான யோசனையை சமர்ப்பித்தார். இந்தத் திட்டத்திற்கு ஜப்பான் ஜைக்கா நிறுவனம் கடனுதவி வழங்க முன்வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக