22 பிப்ரவரி, 2011

திருமாவளவன் சென்னையில் கைது






விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சற்றுமுன் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

பார்வதி அம்மாளின் இறுதி கிரியைகளில் கலந்துகொள்வதற்காக திருமாவளவன் இலங்கை வந்தபோது இலங்கை விமான நிலைய அதிகாரிகளினால் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்தே இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் இவர்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை இலங்கை விமான நிலைய அதிகாரிகள் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்வதி அம்மாளின் இறுதிகிரியைகள் இன்று இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக