25 பிப்ரவரி, 2011

உலக கிண்ண கிரிக்கெட்; இசைக் கருவிகளை எடுத்துச் செல்ல தடை





இலங்கை- பாகிஸ்தான் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க கெத்தாராம விளையாட்டரங்கிற்குள் செல்லும் ரசிகர்கள் இசைக்கருவிகள் (ரம்பர்ட்) எடுத்துச் செல்வதனால் அதற்காக முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்.

071-8687768 (நிஷாந்த) என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பணிப்பாளர் சுராஜ் தந்தெனிய தெரிவித்தார்.

கிரிக்கெட் அரங்கிற்குள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், வெற்றியை கொண்டாடுவதற்காகவும் ரசிகர்கள், ஆரவாரம் செய்யும்போது இசைக்கருவிகளை (ரம்பர்ட்) இசைத்தும் தமது உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள்.

இதற்காக ரம்பர்ட் ஒன்றை எடுத்து செல்வ தானால் முன்கூட்டியே குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அனுமதி பெற வேண்டும்.

அனுமதி கோரும் நபர் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே ரம்பர்ட் எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக