4 டிசம்பர், 2010

ஜயலத் எம்.பி. மீதான குற்றச்சாட்டு; தெரிவுக்குழு அமைக்க அரசு தயார் ஐ.தே.கவிடம் சம்மதம் கோருகிறார் அமைச்சர் தினேஷ்


கம்பஹா மாவட்ட ஐ.தே.க. எம்.பி ஜயலத் ஜயவர்தன மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை அமைக்க அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது.

ஐ.தே.கவினர் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறதா என அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேள்வி எழுப்பினார். ஐ.தே.க.வும் இதற்கு ஆயத்தமாகவே இருக்கிறது எனினும் அமைக்கப்படுகின்ற பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நியாயாதிக்கம் பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐ.தே.க. எம்.பி. ஜயலத் ஜயவர்தன தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுபற்றி விளக்கமளித்தார். அதன்படி அவர்

குறிப்பிட்ட தினத்தில் லண்டனில் இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால் இத்தாலிக்குச் சென்றார் அங்கு சரத் பொன்சேக்கா விவகாரம் தொடர்பாக பேசினார் என்பதை நாம் ஏற்றுக்கொள் கிறோம். அதேபோன்று பொதுநலவாய நாடுகளின் சங்கத்திலும் சரத் பொன்சேகா வைப் பற்றி பேசினோம்.

இதனை ஒப்புக்கொள்கிறேன். எனினும் ஜனாதிபதி ஒக்ஸ்போர்ட் செல்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. ஜயலத் ஜயவர்தன மீதான குற்றச்சாட்டுக்கு தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு விமானம் மூலமோ, ரயில் மூலமோ செல்லும்போதே கடவுச் சீட்டில் பதிவுகள் செய்யப்படும்.

நீங்கள் அந்தந்த நாடுகளுட னும் தொடர்புகொண்டு விசாரணைகளை நடத்துங்கள். வெளிநாடுகளுக்கும் ஆட்களை அனுப்பியாவது இந்த விசா ரணைகளை நடத்துங்கள். அவ்வாறில்லாமல் வெறுமனே ஒருவர் மீது குற்றம்சாட்டுவது முறையல்ல என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும்போது அமைச்சர் தினேஷ் குணவர்தன டொக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. மீதான விசாரணைகளை நடத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைக்கிறோம். இதற்கு ஐ.தே.க. ஆயத்தமாக இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.

முதலாவதாக இந்த விடயத்தை கடந்த முதலாம் திகதி ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. ஒழுங்குப் பிரச்சினையாக இந்த சபையில் கொண்டு வந்தார். அப்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி அமைச்சர் இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்டு செயற்படுகிறோம் என்றும் ரணில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக