16 டிசம்பர், 2010

மட்டக்களப்பு - அம்பாறை எல்லைப் பிரச்சினையை தீர்க்குமாறு செல்வராசா எம்.பி. கோரிக்கை

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரச்சினையை விரைவில் தீர்த்துவைத்த உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காராசாரமான விவாதங்களுடன் இந்த வருடத்துக்கான மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான மகளிர் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் சேகுதாவூத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பொ.செல்வராசா,

மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரச்சினை மிக நீண்டகாலமாக தொன்று தொட்டு வருகின்றது. இதனை தீர்த்துவைக்க எந்தவிதமான நடவடிக்கை எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

அண்மையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட எல்லைக்கல் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ள துரதிர்ஸ்டவசமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இது இவ்வாறு நீண்டுகொண்டே செல்லுமானால் அது இரு கிராமத்துக்கிடையிலான முறுகல் நிலையை தோற்றுவிக்கும்.

எனவே இந்த பிரச்சினையை மிக விரைவில் தீர்த்துவைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் இந்த விடயங்கள் குறித்து ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் இதனை விரைவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

அதற்கு முன்னோடியாக இரண்டு மாவட்ட செயலர்களும் இது தொடர்பில் சந்தித்து இந்த முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளமுடியும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்தி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,

இதுதொடர்பில் கலந்துரையாடுவதற்று எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லையெனவும் அதுதொடர்பில் நில அளவைகளின் ஒத்துழைப்புடன் இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கையெடுக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக