12 டிசம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு அரசியல் தீர்வின் பொது இணக்கத்தை எட்டும் வகையில் உபகுழு அமைக்க முடிவு


தமிழ்க் கட்சிகளின் அரங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் பம்பலப்பிட்டியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தமிழர்கள் சார்பில் பொதுவான இணக்கப்பாடொன்றை எட்டுவது மற்றும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சினைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப் பட்டுள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழர் கள் சார்பில் ஒருமித்த கருத்து வெளியிடப்பட வேண்டும் என்ற நோக்கில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுவான இணக்கப்பாடொன்றை எட்ட வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பதாக நேற்றைய சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சார்பில் கலந்துகொண்டு தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம். கே. சிவாஜிலிங்கம் தினகரனுக்கு தெரிவித்தார்.

பொது இணக்கப்பாட்டை எட்டு வதற்கு ஏதுவாக எமது அரங்கம் சார்பிலும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் சார்பிலும் தலா மூவரைக் கொண்ட உப குழுவொன்றை அமைப்பதென்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம். இவ் உபகுழு அடுத்த வாரம் முதல் கூடி இனப் பிரச்சினைத் தீர்வில் பொதுவான இணக்கப்பாட்டை எட்டுவது தொடர்பில் ஆராயும்.

இரு தரப்புக்குமிடையில் பொது வான இணக்கப்பாடொன்று எட்டப் பட்டு எதிர்வரும் ஜனவரி மாத இறுதி யில் அல்லது பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

அதேநேரம், தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினைத் தீர்வு தொடர்பிலும் நேற்றைய சந் திப்பில் ஆராய்ந்தோம். மீள்குடி யேற்றம், இடம்பெயர்ந்து இன்னமும் முகாம்களில் உள்ளவர்களின் நிலை மைகள், வடபகுதியில் இராணுவத் தினரின் வெளியேற்றம் உட்பட தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சி னைகள் பற்றியும் கலந்துரையாடி யிருந்தோம் என்றார் சிவாஜிலிங்கம்.

தமிழர்களின் உடனடிப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரங்கப் பிரதிநிதி களின் நிலைப்பாடும், தமது நிலைப் பாடும் ஒத்தது எனத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பிரதிநிதிகளுடன் எவ்வாறு இணைந்து செயற்படுவது போன்ற விடயங்களை மூவர் அடங்கிய உப குழு ஆராயும். இதன் அடிப்படையிலேயே எதிர் காலத்தில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது பற்றித் தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று மாலை 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் சார்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு, சந்திரகுமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வினோ நோகராதலிங்கம், அரியநேத்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வராஜா, புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம், ஈ.பி. ஆர்.எல்.எப். பத்மநாபா அணி சார்பில் ஸ்ரீதரன், ஈழ ஏதிலிகள் புனர்வாழ்வு அமைப் பின் சார்பில் சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் குமரகுருபரன், ஸ்ரீடெலோ சார்பில் உதயராசா, சுரேந்திரன் மற்றும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசபை சார்பில் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக