20 டிசம்பர், 2010

திருகோணமலையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு



திருகோணமலை மாவட்டம் கின்னியா பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட கல்லறப்பு பகுதியில் ஒருதொகை ஆயுதங்கள் சீனக்குடா பொலிஸாரினால் நேற்று இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

சீனாக்குடா பொலிஸ் பிரிவின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் உதவி பரிசோதகரின் தகவாளிக்கு கிடைத்த தகவலையடுத்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் கிளைமோர் கண்ணிவெடிகள் 3, மதிவெடிகள் 5, பெச்சினேட்டர் 86, சி.எப் ரக வெடிமருந்து ஒரு கிலோ 800 கிராம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாயுதங்கள் மாவிலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கையின் போது பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தவை என சந்தேகிக்கப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக