2 டிசம்பர், 2010

முல்லைத்தீவில் விலங்குகள் சரணாலயம்

இலங்கை முல்லைத்தீவின் சுமார் 40,000 ஹெக்டேயர் பரப்பளவான பிரதேசம் வனவிலங்குகள் சரணாலயமாக மாற்றப்படவுள்ளதாக அரசாங்கள் தெரிவிக்கின்றது.

இலங்கையின் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரம் வரையாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கையின் வடக்கில் மட்டும் சுமார் 1.5 மில்லியன் கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் இவை முழுதாக அகற்றப்பட்ட பின்னர் அடுத்தவருடம் அளவில் இச்சரணாலயம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படும் எனவும் வனவிலங்கு அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக