21 அக்டோபர், 2010

இலங்கையின் மிக விருப்பத்திற்குரிய முதற்தர தமிழ் இணையத்தளமாக வீரகேசரி


இணையத்தளம் தெரிவாகியுள்ள அதேவேளை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் யாழ் மண் இலாப நோக்கமற்ற இணையத்தளங்களுக்கான வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கையின் ங்கூ. ஆள்களப் பதிவகம் ஏற்பாடு செய்திருந்த மிக விருப்பத்திற்குரிய இணையத்தளத்தைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு கடந்த ஒருமாதகாலமாக நடைபெற்று வந்தது.

முடிவுகள் :-

வாக்கெடுப்பின் அடிப்படையிலும் நடுவர் குழுவின் தீர்மானத்தின் பிரகாரமும் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்ப்பேசும் சமூகத்திற்காக, 80 வருடங்களாக தமிழ்ச் சமுதாயப் பணியாற்றிவரும் வீரகேசரியானது நடைமுறை உலகில் இணையத்தள வாசகர்களின் நலன் கருதி செயற்பட்டதுடன் இணைய உலகில் தனித்துவமான இடத்தையும் தக்கவைத்துள்ளது.

இலங்கையில் பக்கசார்பற்ற செய்திகளை வெளியிடுவதிலும் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களை, குறிப்பாக காணொளிகள் மூலம் உலகுக்கு உரைப்பதிலும் வீரகேசரி இணையத்தளம் தன்னிகரற்றுத் திகழ்கிறது.

அதேபோன்று யாழ்ப்பாணத்து மண் வாசனையை உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்கள் நுகரும் வண்ணம் 'யாழ் மண்' இணையத்தளம் வாசகர்களின் மனம் கவர்ந்து முன்னணியில் திகழ்கின்றது.

இனிவரும் காலங்களிலும் வாசகர்களின் நல்லாதரவு எமக்குக் கிடைக்கும் என்ற எதிபார்ப்புடன் எமது சேவையை மேலும் தரமாக வழங்குவோம் என்பதையும் உறுதிபட கூறிக் கொள்வதில் பெருமையடைகின்றோம்.

இந்தத் தேர்வில் எமக்கு வாக்களித்து, வெற்றி இலக்கை அடைய வைத்த அனைத்து வாசகர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக